• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்! : கணவன் பெயரைச் சொல்லக்கூடாது

2019_dec_a24
கட்டுரைடிசம்பர் 2019

சிகரம்

கணவன் பெயரை மனைவி சொல்லக்கூடாது என்னும் சம்பிரதாயம் இன்றளவும் கிராமப்புறங்களில் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.

சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தால்கூட சாடை மாடையாகத்தான் சொல்வார்களே தவிர, நேரடியாகச் சொல்ல மாட்டார்கள்.

ஒரு பேருந்தில் நடந்த நிகழ்ச்சி என்னவென்றால், நடத்துநர் எல்லோரிடமும் காசு பெற்று, பயணச்சீட்டு வழங்கிக் கொண்டு வந்தார்.

அப்போது ஒரு பெண், “எங்க வூட்டுக்காரர் பேருக்கு ஒரு டிக்கட் கொடு” என்றாள். நடத்துநர் உள்ளிட்ட எல்லோரும் புரியாமல் குழம்பினர்.

“என்னம்மா சொல்ற” நடத்துநர் கேட்டார்.

“அதான்… எங்க வூட்டுக்காரர் பேருக்கு ஒரு டிக்கட் கொடு” என்றாள்.

நடத்துநர் கடுப்பாகிப் போய், “என்னம்மா…? கிண்டல் பண்றியா?” என்று கடுப்படித்தார்.

உடனே, “ஏம்மா, நீங்க சிதம்பரம் போகணுமா? என்றார்.

“ஆமாம்” என்று அந்தப் பெண் தலையாட்டினாள்.

“அட, ஏம்மா! அதைச் சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே!” என்றார் நடத்துநர் அலுப்புடன்.

“எங்க வூட்டுக்காரர் பேர எப்படிச் சொல்றது?” என்றாள் அவள்.

பேருந்தில் ஒரே சிரிப்பு.

அந்தப் பெண்ணின் கணவர் பெயர் சிதம்பரம். சிதம்பரத்திற்கு டிக்கட் கொடு என்றால், கணவர் பெயரைச் சொன்னதாக ஆகிவிடும் என்பதால் அவள் சொல்லத் தயங்கினாள். இவ்வழக்கம் பெண்களிடம் ஆழப் பதிந்திருந்தது.

கணவன் பெயரை மட்டுமல்ல பெரியவர்கள் பெயரையும் பெண்கள் சொல்ல மாட்டார்கள். சொல்லக் கூடாது என்று வற்புறுத்தப்பட்டது.

பெரியவர்கள் பெயரைச் சிறியவர்கள் சொல்லக் கூடாது என்பது மரியாதையின் பொருட்டு என்று சொல்லப்படுவதுண்டு.

இதில் ஆண் பெண் இருவரும் சொல்லக்கூடாது என்று கூறியிருந்தால்கூட அது

வயது சார்ந்து இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால், பெண்கள் மட்டுமே சொல்லக் கூடாது என்று வழக்கத்தில் கொள்வது ஆண் ஆதிக்கப் போக்கின் விளைவு.

பெரியவர்களுக்கு வயதையொட்டி சிறியவர்கள் மரியாதை தரவேண்டும் என்கிற மரபு உள்ளது. சமுதாய இயக்கம்கூட சுமூகமாக இயங்கத் தேவையான உயர்வு வழக்குகளில் இதுவும் ஒன்று.

ஆனால், பெரியவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை உளப்பூர்வமாக வரவேண்டும். கட்டாயப்படுத்தி பெறக் கூடியதாக அமையின் பயனில்லை.

மேலும் இந்த நியதி பெண்களுக்கும் பொருந்த வேண்டும். வயதில் பெரிய பெண்ணுக்கு வயதில் சிறிய ஆண்கள் மரியாதை செலுத்த வேண்டும்.

சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்று ஆண்களுக்கு மாத்திரம் மரியாதை அளிக்கக்-கூடாது.

மரியாதை என்பது இன்னொருவர் தாழ்வில் மற்றவருக்குக் கிடைக்கக் கூடாது, பெரியவர்களுக்கு முன் நின்று கொண்டிருக்க வேண்டும், காலில் விழவேண்டும், கூனிக் குறுக வேண்டும் என்பனவெல்லாம் விரும்பத் தக்கன அல்ல.

ஆணும் பெண்ணும் சமமாக அமர்ந்து உரையாடலாம். அதே போல் பெரியவர்களும் சிறியவர்களும் சமமாக அமர்ந்து உரையாட வேண்டும்.

மரியாதை, உணர்வுகளில் வெளிப்பட வேண்டுமே தவிர உடல் வளைவு நெளிவுகளில், உட்கார்ந்து எழுந்திருப்பதில் அல்ல. அவையெல்லாம் வேடதாரிகளின் செயல்பாடுகள்.

அதிகார வரம்பிற்குட்பட்ட பணிகளில், தனி மனித மரியாதைக்குப் பழுதில்லாமல், சில மரியாதைக்குரிய செயல்பாடுகள் கட்டுப்பாட்டின் நிமித்தம் இருக்கலாம்.

ஆனால், அன்றாட சமுதாய வாழ்வில் இயல்பு வாழ்க்கையே இதமளிக்கும்; கட்டுப்பாடுடன் கூடிய கலகலப்பான பழக்கமே மகிழ்வளிக்கும்.

28
கணிதப் புதிர் : சுடோகுகணிதப் புதிர் : சுடோகு27th November 2019
படக்கதை : நிறவெறியை எதிர்த்துப் போரிட்ட மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்27th November 2019படக்கதை : நிறவெறியை எதிர்த்துப் போரிட்ட மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

மற்ற படைப்புகள்

2019_dec_a12
டிசம்பர் 2019பொது அறிவு
27th November 2019 by ஆசிரியர்

உலக நாடுகள் : குரோசியா(CROATIA)

Read More
2019_dec_c5
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th November 2019 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2019_dec_c1
இலக்கணம்டிசம்பர் 2019
30th November 2019 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More
2019_oct_v11
அக்டோபர் 2019கட்டுரைகட்டுரை
28th September 2019 by ஆசிரியர்

பெயரில் இல்லை ‘சாதனை’!

Read More
2019_dec_a8
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th November 2019 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2019_nov_v4
கட்டுரைநவம்பர் 2019
26th October 2019 by ஆசிரியர்

அடுத்த தலைமுறைக்கும் பெரியார்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025
  • புள்ளிகளை இணையுங்கள்!
    புள்ளிகளை இணையுங்கள்!
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p