• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by விழியன்

கமழி (ஓசோன்) ஓட்டை

2020_feb_v21
கதைகதை கேளு கதை கேளுபிப்ரவரி 2020

ஆண்டு 2075.

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த மாநாடு இன்னும் சில நிமிடங்களில் துவங்கிவிடும். கமழிப் (ஓசோன்) படலத்தில் வரவர ஓட்டை பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது. அந்த ஓட்டையைச் சரி செய்வதற்கான புதிய கருவியினைக் கண்டுபிடித்துள்ளதாக மூத்த விஞ்ஞானி வனிதாமணி அறிவித்திருந்தார். இன்றுதான் அந்தக் கருவியினை இயக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். அதற்காக இரண்டு மாணவர்களைத் தேர்ந்து எடுத்துள்ளார் என்றும் அறிவிப்பு கூறியது. ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் சதீஷ், சங்கீதா ஆகியோர்தாம் அந்த இருவரும். ஈரோட்டில் இருக்கும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றார்கள். ஈரோட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வனிதாமணி ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவர்களிடம் பேசி, இவர்கள் இருவரையும் தேர்ந்து எடுத்தார். சதீஷ், சங்கீதா ஆகியோரின் பெற்றோருக்குப் பெருமிதம் ஒரு பக்கம்! ஆனால், அதில் நிறைய சிக்கல் இருப்பதால் வருத்தமும் ஒரு பக்கம். 2075இல் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. யாரும் பகலில் வெளியே வருவது கிடையாது. இரவில்தான் பள்ளிகள் இயங்கும். பகலில் எல்லாரும் வீட்டிலேயேதான் இருப்பார்கள். பகலில் உறங்குவார்கள். மிகமிக தவிர்க்க முடியாத தேவை என்றால் மட்டுமே வெளியே கிளம்புவார்கள். அதுவும் வீட்டிற்குள்ளேயே மகிழுந்தில் ஏறிவிடுவார்கள். மகிழுந்து முழுவதும் சூரிய ஒளி புகா வண்ணம் தடுப்பான்கள் போடப்பட்டு இருந்தன. ஏனெனில், கமழிப் படலம் சில ஆண்டுகளுக்கு முன்னரே 5% குறைந்துவிட்டது. உலகமெங்கும் தோல் நோய்கள் ஏற்பட்டு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், செடிகளுக்கும், மரங்களுக்கும் பெரும் பாதிப்பு. பெரும்பாலான செடிகளும் அழிந்துவிடும் நிலையில் இருந்தன.

சதீஷ், சங்கீதா இருவரும் இந்தக் கருவியை இயக்கப்போவது உலகிற்கே மகிழ்ச்சி. ஆனால், அவர்களின் நண்பன் அசோக்கிற்கு கொஞ்சம் மன வருத்தம். தான் தேர்வாகவில்லை என்று உள்ளுக்குள் புழுங்கினான். எப்படியேனும் இவர்கள் போவதைத் தடுத்துவிடவேண்டும் என துடியாய்த் துடித்தான். கைவசம் பல்வேறு திட்டங்களை வைத்திருந்தான். அசோக் ஏற்கெனவே கமழி பற்றி பல ஆய்வுகளை அந்த சின்ன வயதிலேயே செய்திருந்தான். தனக்கு எவ்வளவு அறிவு இருக்கின்றது! ஆனால், தன்னை இந்த விஞ்ஞானி வனிதாமணி தேர்வு செய்யவில்லையே என வருத்தப்பட்டான்.

இதுவரையில் அந்தக் கருவி என்ன என்று யாருக்கும் காட்டவே இல்லை. இந்தக் கருவி வானில் பறந்து, அதிலிருந்து ஏதேனும் திரவத்தினைத் தூவி கமழிப் படலத்தை வலுவாக்குவார்கள் என நாசா விஞ்ஞானிகள் கணித்தார்கள். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், அந்தக் கருவி மூலம் நிலவுக்குச் சென்று அங்கிருந்து ஏதேனும்  செய்வார்கள் என நினைத்தார்கள். சீன விஞ்ஞானிகள், அதில் என்ன இருக்கும் எனத் தெரிந்துகொள்ள எவ்வளவோ ஊடுருவ முயற்சி செய்தார்கள். இந்த ஆய்வில் பாகிஸ்தான் விஞ்ஞானிகளும் நிறைய பங்களித்து இருந்தார்கள்.

மாநாடு ஈரோடு நகரின் முக்கிய அரங்கமொன்றில் துவங்க இருந்தது. சரியாக இரவு 10:00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. அனைத்து தொலைக்காட்சிகளும், இணைய வழி தொலைக்காட்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்து இருந்தனர். கிட்டத்தட்ட உலகத்தில் இருக்கும் 90% மக்கள் இந்த நிகழ்வில் என்ன நடக்கின்றது என ஆர்வமாகப் பார்க்கத் தயாராய் இருந்தார்கள். ஏனெனில், இந்த முயற்சி வெற்றி-பெற்றுவிட்டால் வாழ்க்கை முறையே மாறிவிடும் அல்லவா! ஒற்றை ஒளி விஞ்ஞானி வனிதாமணி மீது விழுந்தது மொத்த உலகின் பார்வையும்!

அவர் பேச ஆரம்பித்தார், “உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம். நீங்கள் ஆவலுடன் காத்திருந்த அந்தத் தருணம் வந்துவிட்டது. கமழிப் படலத்தை எப்படிச் சரி செய்யப் போகின்றோம் என்று எல்லாரும் ஆவலாகக் காத்திருக்கின்றீர்கள். சில செயல்களை அந்தந்தக் காலகட்டத்தி-லேயே செய்து முடித்திருக்க வேண்டும். காலம் கடந்த சிந்தனையும், அக்கறையும் கொடுமையானது. அப்படித்தான் இந்தக் கமழிப் படலம் மீதான அக்கறை. உண்மையில் இப்போது நாம் என்ன செய்தாலும் இந்தப் படலத்தை மாற்றி அமைக்க முடியாது.’’

அவையில் ஒரே சலசலப்பு. சரியாக அதே நேரம் சதீசும் சங்கீதாவும் மேடைக்குச் சென்றார்கள். இப்போது வெளிச்ச ஒளி மூவர் மீதும் இருந்தது.

“இப்போது மாற்றி அமைக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், நாம் இப்போது என்ன செய்யப் போகின்றோம்? நானும் சில விஞ்ஞானிகளும் சேர்ந்து ஒரு கருவியினைக் கண்டுபிடித்துள்ளோம். அது.. அது.. கால இயந்திரம்.’’

“வாட்.. என்ன..?’’

“ஆமாம். இந்தக் கால இயந்திரம் 90 ஆண்டுகளுக்கு முன்னர் செல்லும். அதற்கு மேல் அதனால் போகமுடியாது. முடியவும் கூடாது. இல்லையேல் ஒவ்வொரு வரலாறும் மாற்றப்பட்டுவிடும். சதீசும் சங்கீதாவும் இந்தக் கருவியின் மூலமாகப் பயணம் செய்வார்கள்.  இவர்கள் இரண்டு பேரின் வேண்டு-கோளின்படி, அவர்களின் நண்பன் அசோக்கும் உடன் பயணமாவான். இவர்கள் 90 ஆண்டுகளுக்கு முன்னர் சென்று மக்களோடு மக்களாகக் கலந்து, முக்கியமாகக் குழந்தைகளிடம் இந்தப் பூமியைப் பாதுகாப்பது குறித்துப் பேசுவார்கள்; கதைகள் சொல்லுவார்கள். பெரியவர்களைவிட குழந்தைகளிடம் சொன்னால்தான் பயன் கிடைக்கும். அவர்களிடம்  எல்லா விவரங்களையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டால் போதும். குழந்தைகளைவிட இந்தப் புவியை பாதுகாப்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அதனால்தான் மூன்று குழந்தை-களைத் தேர்வு செய்துள்ளோம்.

சதீஷ், சங்கீதா, அசோக்! -நீங்கள் மூவரும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இந்தப் புவியினைக் காப்பாற்ற குழந்தைகளிடம் வலுவான கோரிக்கை வையுங்கள். வெறும் அறிவு மட்டுமே போதாது. இந்த ஒட்டுமொத்த உலகின் மீதும் அக்கறை வேண்டும். தான் பெறும் அறிவு இந்த உலகினைப் பாதிக்கக்கூடாது. மாறாக, பாதுகாக்கவே பயன்பட வேண்டும். சொல்வீர்களா?’’

மூவரும் தலை அசைத்தனர். பேசி முடித்ததும் அரங்கமே _ ஏன், உலகமே எழுந்து கைகளைத் தட்டியது. சரியாக நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு குழந்தைகள் மூவரும் கால இயந்திரத்தில் அமர்ந்தனர். அனைவரையும் நோக்கிக் கை அசைத்தனர். ஆண்டு _- 1985.

ஈரோட்டில் இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றின் வகுப்பறையின் மேல்தளத்தில் ‘தட்’ என்ற சத்தத்துடன் அந்த இயந்திரம் இறங்கியது.

29
காரணமின்றி ஏற்காதீர்கள் : தேங்காய்க்குக் குடுமி ஏன்?காரணமின்றி ஏற்காதீர்கள் : தேங்காய்க்குக் குடுமி ஏன்?28th January 2020
ஓவியம் வரைவோம்!26th February 2020ஓவியம் வரைவோம்!

மற்ற படைப்புகள்

2021_jan_v32
கதைஜனவரி-2021
21st January 2021 by ஆசிரியர்

படக்கதை : கேள்வியின் நாயகன் சர்.அய்சக் நியூட்டன்

Read More
2023_mar_7
கதைசிறார் கதைமார்ச் 2023
1st March 2023 by ஆசிரியர்

சிறார் கதை: எறும்பின் விருந்தோம்பல்

Read More
கதை கேளு கதை கேளுஜூலை
6th July 2018 by விழியன்

குட்டி முயல் பூவிழி

Read More
2020_dec_v16
கதைடிசம்பர் 2020
28th December 2020 by ஆசிரியர்

படக்கதை : அன்னை மீனாம்பாள் சிவராஜ்

Read More
8
கதைகதை கேளு கதை கேளுசெப்டம்பர் 2023பிஞ்சு 2023
8th September 2023 by விழியன்

மொட்டைமாடி கூட்டாஞ்சோறு கலாட்டா

Read More
2016_aug_pinju9
ஆகஸ்ட்கதை கேளு கதை கேளு
2nd August 2016 by -விழியன்

எங்கே இருக்கு சின்னு மரம்?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p