• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சிறுவர் கதை : பேராசைக்குக் கிடைத்த சூடு!

2020_mar_v49
சிறார் கதைமார்ச் 2020

சரவணா இராஜேந்திரன்

விஜயநகரத்தை ஆட்சி செய்துவந்த மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய அம்மாவின் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு அதிக வயது ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவரை அழைத்துத் தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த மருத்துவரும் “தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் மரணடைந்துவிடுவார்கள்” என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார்.

தன் தாயாரிடம் சென்று “அம்மா, உங்களுக்கு சாப்பிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது?’’ என்று கேட்டார். அதற்கு அவரது தாயாரும், “மாம்பழம் தான் வேண்டும்’’ என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல. இருப்பினும் தன் ஆள்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆள்கள் மாம்பழம் வாங்கி வருவதற்காகப் புறப்பட்டனர்.

மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார். மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிகவும் வேதனை அடைந்தார். அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.

பேராசைபிடித்த புரோகிதர்களும் “மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனிகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்” என்றனர்.

மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாள்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிகவும் மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.

இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான். புரோகிதர்களைச் சந்தித்தான். “என் அம்மாவுக்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்” என்றான்.

புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கெனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான். புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர். இதைப் பார்த்த மன்னர், தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார்.

பின் தன் பணியாள்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் “ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்?’’ என்று கேட்டார். “மன்னாதி மன்னா! என்னை மன்னிக்க வேண்டும். நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தறுவாயில் வலிப்பு நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்குச் சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியேதான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு?’’ என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன்.

இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு, “என்னடா, தெனாலிராமா! இது முட்டாள்தனமாக இருக்கிறதே’’ என்றார்.

“இல்லை அரசே! விளக்கமாகக் கூறுகிறேன்! சற்றுக் கேளுங்கள்.  முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால்தான் அவரது ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே…… அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே., அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்குச் சூடு போட முடியாமல் போனதால்தான் இவர்களுக்குச் சூடு போட்டேன்’’ என்றான்.

இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார். தெனாலிராமனைப் பாராட்டினார். புரோகிதர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.

கடலச்சு இல்ல.. சூரிய அச்சு!

படத்தில் காண்பது கோயில்பட்டி கடலை மிட்டாய் அல்ல…! சூரியனின் படம்…!. நான்கு மீட்டர் அகலக் கண்ணாடி பொருத்தப்பட்ட சூரியத் தொலைநோக்கி (solar telescope) வழியே படம் பிடிக்கப்பட்டது.

பத்தாயிரம் கிலோ மீட்டர் அகலம் உள்ள சூரியனைப் படம் பிடித்தது பசிபிக் தீவுகளில்! பளிச் எனத் தெரியும் பகுதிகள் ஒவ்வொன்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் அளவு உள்ளவை.

ஆனால் இங்கோ ஏழுகுதிரை பூட்டிய தேர்…. ஒரு சக்கரம் உள்ள தேர்…. சாரதி _ காலில்லா முடவன்….. என்றெல்லாம் கதை கட்டி…. புராணம் எழுதிப் பிழைக்கின்றனர்.

– சு.அறிவுக்கரசு

26
காரணமின்றி ஏற்காதீர்கள்! - ஆமை புகுந்த வீடு உருப்படாதா?காரணமின்றி ஏற்காதீர்கள்! - ஆமை புகுந்த வீடு உருப்படாதா?27th February 2020
சின்னக்கைச் சித்திரம்27th February 2020சின்னக்கைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

2023_jan_41
கதைசிறார் கதைஜனவரி 2023
6th January 2023 by ஆசிரியர்

சிறார் கதை

Read More
2020_mar_v4
பாசத்திற்குரிய பேத்திமார்ச் 2020
26th February 2020 by ஆசிரியர்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : மணியம்மைப் பாட்டியின் நூற்றாண்டு

Read More
2021_sep_v8
கதைசிறார் கதைசெப்டம்பர் 2021
30th August 2021 by ஆசிரியர்

சிறுவர் கதை : காட்டிக்குள்ளே ஒரு நாள்

Read More
2020_mar_v12
இலக்கணம்மார்ச் 2020
26th February 2020 by ஆசிரியர்

PREPOSITIONS – முன்னிடைச் சொற்கள் பயன்படுத்தும் முறை -11

Read More
2020_mar_v38
கதைகோமாளி மாமாமார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

தியாக சீலர்

Read More
2023_mar_7
கதைசிறார் கதைமார்ச் 2023
1st March 2023 by ஆசிரியர்

சிறார் கதை: எறும்பின் விருந்தோம்பல்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p