• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அறிவுச்சுட்டியின் அதிரடிக் கேள்வி

ஜனவரி

மகன்: அப்பா! விநாயகருக்கும் முருகனுக்கும் சிவபெருமான் அப்பா. அந்த சிவபெருமானுக்கு அப்பா யாரு?

அப்பா: கண்ணா! அவர் முழுமுதற் கடவுள்! அவர் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதி. அவரே அம்மையப்பர்!

மகன்: அப்போ சிவபெருமான் அப்பா அம்மா இல்லாத அனாதையா?

அப்பா: அய்யையோ… இந்த உலகத்து நாயகனை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. அது சாமி நிந்தனையாக மாறி தெய்வக் குற்றமாகிவிடும்.


மகன்: அப்பா யானையை ஏன் எல்லோரும் கையெடுத்துக் கும்பிடுறாங்க!

அப்பா: சிவபெருமானின் தலைமகனாகிய கணபதியார் ஏதோ ஒரு காரணத்தால் தலையை இழந்தபோது, தந்தையார் யானையின் தலையை வெட்டி கணபதியாருக்குப் பொருத்தினார். அன்றிலிருந்து, மக்கள் யானையைக் கண்டால் கணபதியாகவே கருதி கையெடுத்துக் கும்பிட்டு வர்றாங்க!

மகன்: யானை தெய்வ அம்சம் பொருந்தியது ஆயிற்றே, அப்புறம் எதுக்கு யானையை கடை கடையாய் பிச்சை எடுக்க வைக்கிறாங்க!


அப்பா: மகனே முன்பெல்லாம் இப்படியெல்லாம் கேள்வி கேட்கமாட்டியே…உன்னை யார் இப்படி கேள்வி கேக்க வைக்கிறாங்க!

மகன்: அப்பா! நம்ம ஊரு சிவன் கோவிலில் சிவராத்திரி அன்னிக்கு, சாமிக்குப் போட்ட நகையெல்லாமே, விடியற்காலை திருட்டுப் போயிருச்சு! நகையைத் திருடர்கள் திருடும்போது சிவபெருமான் தன் சூலாயுதத்தால் அவங்க கண்ணை ஏன் குத்தாம விட்டாரு!

அப்பா: மகனே அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்.

மகன்: திருடன் நகையைக் கொண்டுபோய் கடையிலே வித்து, சந்தோஷமாக வாழ்ந்திடுவான். அப்புறம் அவர்களைக் கொன்றால் என்ன? கொல்லாமல் விட்டால் என்ன?

அப்பா: ??????


அப்பா: நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!

மகன்: கடவுள்தானே நம்மை வாழ்த்தணும் நீங்க எதுக்குக் கடவுளை வாழ்த்துறிங்க.

அப்பா: மகனே! நாம் வாழ்வதற்காகவே அவரை வாழ்த்துகிறோம். நாம் பாடும் மந்திரமொழிகள் அவன் செவியில்பட்டால், அவன் உள்ளம் குளிரும். அவன் உள்ளம் குளிர்ந்தால் நம் வாழ்வு செழிக்கும்.

மகன்: மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாமுனு ஒரு பக்தர்தான் சொல்லியிருக்கிறாரே!

– ஈரோடு மே.அ.கிருஷ்ணன்

21
உலகநாடுகள் - சவூதிஅரேபியா31st May 2011
ஒரு விளையாட்டு31st May 2011

மற்ற படைப்புகள்

ஜனவரி
31st May 2011 by ஆசிரியர்

சின்னக்கதை

Read More
ஜனவரி
31st May 2011 by ஆசிரியர்

புத்தர்

Read More
2011_july_4-1
ஜனவரி
1st July 2011 by ஆசிரியர்

சுடோகு

Read More
ஜனவரி
8th June 2011 by ஆசிரியர்

விடுகதைகள்

Read More
ஜனவரி
31st May 2011 by ஆசிரியர்

ஒரு விளையாட்டு

Read More
ஜனவரி
21st May 2011 by ஆசிரியர்

பிஞ்சுகள் பக்கம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p