• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு வாசகரின் கடிதம் – பரிசு பெற்றேன்; தொகையைக் கொடுத்தேன்!

2020_jun_v7
ஜூன் 2020பிஞ்சுகள் பக்கம்

அன்புள்ள ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு,

உங்கள் பேத்தியின் வணக்கம். நலம். நலம் அறிய அவா. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் வழியில் தங்கள் வழிகாட்டுதலின் படி நடக்கும் குடும்பத்தில் நான்காம் தலைமுறை தான் நானும் (வை.கவின்மதி-5ம் வகுப்பு) எனது தம்பியும் (வை.நற்குணநிதி-3ம் வகுப்பு). கொரோனா ஊரடங்கு காலத்தில் நாள்தோறும் காலை எழுந்தவுடன் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்வோம். காலை உணவுக்கு பின் நானும் தம்பியும் சிறிது நேரம் விடுதலை, முரசொலி, தி இந்து தமிழ் நாளிதழ்கள், பெரியார் பிஞ்சு, சிறுவர் கதைப் புத்தகங்கள் வாசிப்போம். இடையிடையே கேரம் போர்டு, செஸ், தாயம், பல்லாங்குழி விளையாடுவோம். வாய்ப்பு கிடைத்தால் எங்களது பெற்றோரும், பாட்டியும் இணைந்து கொள்வார்கள்.

மாலை சிற்றுண்டிக்குப் பின் மொட்டை மாடிக்குச் சென்று செடிகளுக்குத் தண்ணீர் விட்ட பின், பட்டம் விட்டு விளையாடுவோம். பிறகு பாடங்களை மறந்து விடாமல் நினைவுபடுத்துவதற்காக தமிழ் – ஆங்கில இலக்கணம், கணிதப்பயிற்சி, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தகவல்கள் போன்றவற்றைப் படிப்போம். சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்த பின் இரவு உணவுக்கு முன்பு அப்பாவுடன் சேர்ந்து “You Tube” வலைக்காட்சி மூலம் கலைஞர் தாத்தா, பேராசிரியர் அன்பழகன் தாத்தா, ஆசிரியர் தாத்தா, பேராசிரியர் சுப.வீ தாத்தா, தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உரைகளைக் கேட்போம். இரவு உணவுக்கு பின் அப்பாவுடன் அந்த உரைகள் குறித்து உரையாடுவோம். எங்களுக்கு எழும் சந்தேகங்களை அப்பா தீர்த்து வைத்து திராவிடத்தின் தேவையை எடுத்துரைப்பார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு.வெங்கடேசன் அவர்கள் ஊரடங்கில் குழந்தைகளுக்காக நடத்திய “களை கட்டட்டும் வீடு கற்பனைத் திறத்தோடு’’ கதைப் போட்டியில் பங்கேற்று “இன்னா செய்தார்க்கு’’, “பிறந்தநாள் பரிசு’’ என இரண்டு கதைகளை எழுதி அனுப்பினேன். இரண்டு கதைகளும் தலா ரூ.250/– பரிசு பெற்றன. பரிசுத் தொகையான ரூ.500/–அய் நமது நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கினேன். இது குறித்த செய்தி 30.04.2020 அன்று ‘விடுதலை’ நாளிதழில் வெளியானது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னையும், என் போன்று பரிசுத் தொகையை நலிந்தோர்க்கு உதவிட நன்கொடையாக வழங்கிய மற்ற குழந்தைகளையும் பாராட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் தனது முகநூல் பக்கத்தில் “குழந்தைகளிடம் கற்றுக் கொள்வோம்’’ என்ற வாழ்த்துச் செய்தியைப் பதிவு செய்தார். இது தொடர்ந்து இயன்ற அளவு உதவிட வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது.

தங்கள் அன்பு பேத்தி

வை.கவின்மதி,

த/பெ வழக்குரைஞர் இராம.வைரமுத்து, மதுரை-11

23
நம் கடமை!நம் கடமை!4th June 2020
கணிதப் புதிர் சுடோகு4th June 2020கணிதப் புதிர் சுடோகு

மற்ற படைப்புகள்

2020_may_v32
பிஞ்சுகள் பக்கம்மே 2020
9th May 2020 by ஆசிரியர்

உயிர்நேயம் – நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை

Read More
ஜூலை 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்
20th July 2023 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் கடிதம்

Read More
2020_nov_v12
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
15th November 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2022_mar_p7
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2020_mar_v6
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020
26th February 2020 by ஆசிரியர்

திராவிட வாசகர் வட்டம் நடத்தும் – பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020

Read More
2022_june_16
பிஞ்சுகள் பக்கம்மே 2022
3rd June 2022 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் பேட்டி விடை:

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p