• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் – கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா?

2020_jun_v38
ஜூன் 2020பிஞ்சுகள் பக்கம்

பெற்றவர்கள், பெரியவர்கள் ஏன் சில ஆசிரியர்கள் கூட மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும் முன் கடவுளை வேண்டிக் கொண்டால் தேர்வு சிறப்பாக எழுதலாம் என்று கூறி அவ்வாறே மாணவர்களைச் செய்யவும் சொல்கின்றனர்.

படிக்காத மாணவன் கடவுளை வேண்டுவதால் அதிக மதிப்பெண்கள் பெறுவது இல்லை, நன்றாகப் படிக்கின்ற மாணவன் கடவுளை வேண்டிக் கொள்ளாததால் குறைவான மதிப்பெண் பெறுவதும் இல்லை.

எனவே, படிப்பைப் பொறுத்தே தேர்வு எழுதுகிறான். மதிப்பெண் பெறுகிறான் என்னும் போது இதில் கடவுளுக்கு என்ன வேலை?

தன்னை வணங்காதவனுக்கு உதவாது என்றால் அது கடவுளாகுமா? கடவுளே இல்லையென்று இப்போது கொரோனா வைரஸ் காட்டிவிட்டது. கடவுளுக்கு சக்தியில்லை; கொரோனாவுக்குப் பயந்து கடவுள் முகக்கவசம் மாட்டிக் கொள்கின்றது; கோயில்கள் மூடிக்கிடக்கின்றன என்னும் போது கடவுள் எல்லாம் வல்லது; எல்லா சக்தியும் உடையது என்பதெல்லாம் உண்மையல்ல; மூடநம்பிக்கை என்று தெளிவாக இப்போது வெளிவந்துவிட்டது. எனவே, பிஞ்சுகள் தங்கள் அறிவை, உழைப்பை நம்ப வேண்டும் மூடநம்பிக்கையை விலக்க வேண்டும்!

கடவுளுக்குத் தலைமுடியைத் தரவேண்டுமா?

தனக்கு நோய் தீர்ந்தால் தலைமுடியை கடவுளுக்குக் காணிக்கையாகத் தருகிறேன், தன் கோரிக்கை (வேண்டுதல்) நிறைவேறினால் தலைமுடியைத் தருகிறேன் என்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வேண்டிக் கொண்டு, அவ்வாறே கோயிலுக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கின்றனர்.

கடவுளும் முடியைக் காணிக்கையாக கேட்கிறதா? கடவுள் நோய் தீர்க்கிறதா? நம் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுகிறதா? இவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டும்.

கடவுள் என்பது கற்சிலை. அதை மனிதன்தான் கல்லிலிருந்து செதுக்கி உருவாக்குகிறான். அப்படி உருவான கல்லுக்கு எப்படிக் கேட்கும் சக்தியும், நம் வேண்டுதலை நிறைவேற்றும் சக்தியும் வரும்? கல்-கல் தானே?

கடவுளையே கடத்திக் கொண்டு போகிறார்கள். கடவுளுக்கு சக்தியிருந்தால் அது காப்பாற்றிக் கொள்ள வேண்டியது தானே? ஏன் முடியவில்லை?

எனவே, நோய் வந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டுமே தவிர, கோயிலுக்குச் செல்லக்கூடாது முடியை வளர்ப்பது கோயிலுக்குச் சென்று மொட்டை போடுவது அறியாமை மற்றும் உடல் நலக்கேடு. எனவே, அறிவுக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாதவற்றைச் செய்யக்கூடாது!

23
அடிக்கிற வெயிலுக்கு..2 : அய்ஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்?அடிக்கிற வெயிலுக்கு..2 : அய்ஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்?4th June 2020
செய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி4th June 2020செய்து அசத்துவோம் - கூண்டுக்கிளி

மற்ற படைப்புகள்

2019_oct_v19
அக்டோபர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th September 2019 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_sep_v18
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
30th August 2021 by ஆசிரியர்

ஓலிம்பிக் – நீரஜ் சோப்ரா டோக்கியோவில் சாதனை: ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!

Read More
2023_mar_9
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2023
1st March 2023 by ஆசிரியர்

துணுக்குச் சீட்டு – 6: தேன்… கெட்டுப் போகுமா?

Read More
2021_feb_v29
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2022_May_5
பிஞ்சுகள் பக்கம்மே 2022
27th April 2022 by ஆசிரியர்

ஏன் ONTY ONE இல்லை

Read More
2020_jan_a3
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
26th December 2019 by ஆசிரியர்

செயல் வடிவம்: நதிகளை இணைக்கத் திட்டம் தரும் மாணவி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p