• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்: விழிக்கும் முகராசிக்கு ஏற்ப நல்லது கெட்டது நடக்குமா?

2020_oct_v12
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்

சிகரம்

இரவு உறக்கத்திற்குப் பின் விடிந்து விழிக்கும் போது யார் முகத்தில் முதலில் விழிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அன்றைக்கு நல்லதும் கெட்டதும் நடக்கும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகிறது.

காலையில் எழுந்தவுடன் சிலர் தங்களின் உள்ளங்கைகளில் விழித்தால் நல்லது என்று நம்பி, காலையில் தங்கள் உள்ளங்கைகளில் விழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் விழித்தவுடன் பசுமாட்டைப் பார்க்க வேண்டும் என்று அதன் முகத்தில் விழிப்பர். சிலர் காலையில் விழித்தவுடன் சூரியனைப் பார்ப்பர்.

சிலர் இராசியான முகத்தில் விழிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை வரச் சொல்லி அவர்கள் முகத்தில் விழிப்பர்.

சிலர் ஏதாவது கெட்டது நடந்தால், இன்றைக்கு விழித்த முகம் சரியில்லை என்று கவலைப்படுவதும்; அவர்களைக் கடுமையாகத் திட்டுவதும்கூட உண்டு.

இவை சரியா? இவற்றில் உண்மை உள்ளதா? இவை அறிவுக்கு உகந்தவையா? என்றால், நிச்சயமாக இல்லை. இவை அனைத்தும் சுத்த மூடநம்பிக்கைகள்.

ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு நடக்கும் நல்லது கெட்டதுக்கும், அன்றைக்கு அவர் விழித்த முகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருவர் முகத்தில் தொடர்ந்து பத்து நாள்கள் விழித்தால், அந்த பத்து நாள்களில் நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். நல்ல இராசியுள்ள முகம் என்றால் 10 நாள்களும் நல்லதே நடப்பதில்லை. அதே போல், இராசியில்லாத முகம் என்றால் பத்து நாள்களும் கெட்டதே நடப்பதில்லை.

இராசியுள்ள முகம் என்றால் அவர் முகத்தில் விழிக்கும் நாள்களில் எல்லாம் நல்லதுதானே நடக்கவேண்டும்? அதே போல் இராசியில்லாத முகம் என்றால் அவர் முகத்தில் விழிக்கும் எல்லா நாள்களிலும் கெட்டதுதானே நடக்க வேண்டும்? ஆனால், அப்படி நடப்பதில்லையே! யார் முகத்தில் விழித்தாலும் நல்லதும் கெட்டதும் கலந்தே நடக்கிறது என்றால், விழித்த முகத்திற்கும், நடக்கும் நல்லது கெட்டதுக்கும் தொடர்பே இல்லை என்பதுதானே பொருள்?

அப்படியென்றால் இராசியான முகம், இராசியான பொருள் என்பதெல்லாம் உண்மை இல்லை என்றுதானே அர்த்தம்?

எனவே, “இராசியில்லா முகத்தில் விழித்துவிட்டோமே, என்ன கேடு வருமோ” என்று கவலை கொள்வதும், அச்சப்படுவதும் அறியாமை; அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கை.

எனவே, நடப்பது எல்லாம் இயல்பாய் நடப்பவை; ஒருவர் முகராசியைப் பொறுத்தது அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு அறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகளை ஒதுக்கித்தள்ளி, அறிவுவழி நடக்க வேண்டும்.

26
பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்குபிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு14th October 2020
சின்னக்கைச் சித்திரம்14th October 2020சின்னக்கைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

2022_dec_5
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம்

Read More
13
ஏப்ரல் 2025பாடல்கள்பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
5th April 2025 by - கவிஞர் விண்மீன்

ஓவியம்

Read More
2021_sep_v36
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
2nd September 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_jul_v37
ஜூலை 2021பிஞ்சுகள் பக்கம்
4th July 2021 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் : புத்தர் கடவுளின் அவதாரமா?

Read More
2021_dec_v20
டிசம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
29th November 2021 by ஆசிரியர்

நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகளே, பெற்றோரிடம் சொல்லத் தயங்காதீர்!

Read More
11
ஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
5th April 2025 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 13 : வரி வாலாட்டிக் குருவி (WHITE BROWED WAGTAIL)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p