• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்: கைராசி என்பது உண்மையா?

2020_dec_v22
டிசம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்

சிகரம்

ஒரு காரியத்தைத் தொடங்கி வைப்பவர் கைராசியைப் பொறுத்து அக்காரியம் நிறைவேறுவதும், நிறைவேறாமல் போவதும் நிகழும் என்ற நம்புகின்றனர். அதனால், கைராசிக்காரரைக் கொண்டு அக்காரியத்தைத் தொடங்குவது வழக்கத்தில் உள்ளது.

கடைக்காரர் முதல் விற்பனையைக் கைராசிக்காரரைக் கொண்டு தொடங்குவார். கைராசிக்காரர் முதல் விற்பனையைத் தொடங்கினால் அன்றைக்கு விற்பனை அதிகம் நடக்கும் என்று நம்புகின்றனர்.

கட்டடத்திற்கும் முதல் கல் எடுத்து வைத்தல், செடி நடுதல், விதை விதைத்தல் இப்படி பல செயல்களையும் கைராசிக்காரர் முதலில் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அது சிறப்பாக அமையும் என்று நம்புகின்றனர்.

கைராசி என்பது உண்மையா? என்றால் நிச்சயம் இல்லை. நடக்கின்ற செயலுக்கும், அதன் வெற்றி, தோல்விக்கும் தொடங்கி வைக்கின்ற கைராசி காரணம் அல்ல.

கைராசி என்று எதுவும் இல்லை. தினமும் கைராசிக்காரர் விற்பனையைத் தொடங்கிவைத்தாலும், அதில் பல நாள்கள் விற்பனைச் சரியாக நடக்காமல் போவதை நாம் அறியலாம்.

அதேபோல் சிலர் தொடங்கினால் அது துலங்காது என்பர். அவர் கைராசி இல்லாதவர் என்பர். அப்படி கைராசி இல்லாதவர் பல செயல்களைத் தொடங்கினாலும், அவர் தொடங்கிய பல செயல்கள் வெற்றியாயும், சிறப்பாகவும் அமைவதை அறியலாம்.

எனவே, தொடங்குகின்றவர் கைராசி ஒரு செயலின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதாய் நம்புவது அறியாமை. அதில் உண்மை சிறிதும் இல்லை.

செய்கின்றவர் திறமையைப் பொறுத்து அச் செயலின் சிறப்பு, வெற்றி, தோல்வி அமையுமே தவிர, சிலரது கைராசியைப் பொறுத்து எதுவும் நடக்காது. எனவே, கைராசி என்பது மூடநம்பிக்கையாகும்.

தடுக்கினால், தவறினால் கேடு வருமா?

ஒரு செயலைச் செய்யச் செல்லும்போது கால் தடுக்கினால் அக்காரியம் நிறைவேறாது என்றும், ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது பொருள் தவறி விழுந்தால் அச்செயல் நடக்காது என்றும் நம்புகின்றனர்.

ஒரு செயல் நடக்குமா? நடக்காதா? என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் சகுனமாக இவற்றை நம்புகின்றனர். இவை உண்மையா?’ என்றால் இல்லை. இவை மூடநம்பிக்கைகளே!

தடுக்குதல், தவறுதல் என்பவை இயல்பாய் நிகழ்பவை. இப்படி இயல்பால் நிகழ்பவற்றை அப்போது செய்யப்படும் செயல்களோடு தொடர்புபடுத்தி, அவற்றின் வெற்றி தோல்வியை இவை முன்கூட்டியே அறிவிக்கின்றன என்று நம்புவது அறியாமை.

தடுக்கும் போதும், தவறும்போதும் நடக்கும் பல செயல்கள் நன்றாக வெற்றிகரமாக நடந்து முடிவதைப் பலமுறை சோதித்துப் பார்த்தால் தெரியும்.

தேர்வு எழுதச் செல்லும் மாணவன் காலிலோ, தலையிலோ இடித்துக் கொண்டால் அத்தேர்வு நல்ல முறையில் அவனால் எழுத முடியாமல் போகும் என்று நம்புகின்றனர். இதில் சிறிதுகூட உண்மையில்லை.

நன்றாகப் படித்துள்ள மாணவனுக்கு எது தடுத்தாலும், எது தவறினாலும் அவன் சிறப்பாகவே எழுதி முடிப்பான். எனவே, தேர்வு எழுதுவதற்கும் தடுத்தல், தவறுதல் நிகழ்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

விழுந்து எழுந்துதான் குழந்தை நடக்கப்-பழகுகிறது. விழுந்து எழாமல் சைக்கிள் ஓட்டப் பழகினோர் எத்தனை பேர்? இவற்றைப் புரிந்து கொண்டாலே இந்த மூடநம்பிக்கை ஒழிந்து போகும்.

இராசி, தடங்கல், தவறுதல் போன்றவற்றை, பல  செயல்களில் சோதித்துப் பார்த்தால் அவற்றில் சிறதும் உண்மையில்லை; அவை மூடநம்பிக்கைகளே என்பது தெளிவாய் விளங்கும்.

30
அமெரிக்காவில் அய்யாவிழா!அமெரிக்காவில் அய்யாவிழா!28th December 2020
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள் & வெற்றி பெற்றோர் பட்டியல்28th December 2020குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள் & வெற்றி பெற்றோர் பட்டியல்

மற்ற படைப்புகள்

2020_sep_v35
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
3rd October 2020 by ஆசிரியர்

நேர்பட ஒழுகு

Read More
2022_August_14
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd August 2022 by ஆசிரியர்

பயங்கர ப்ப்பா ஆஆசம்

Read More
2022_mar_p4
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

நான் ஏன் வெறுக்கணும்?

Read More
ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
5th June 2024 by என்.மணி, ஈரோடு

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு சுவை

Read More
21
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by ஆசிரியர்

பிஞ்சு நூல் அறிமுகம்

Read More
2020_oct_v12
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்: விழிக்கும் முகராசிக்கு ஏற்ப நல்லது கெட்டது நடக்குமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p