• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்: மதங்கள் மனிதநேயத்தை வளர்க்கின்றனவா?

2021_aug_v12
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்

சிகரம்

மதம் என்பது கடவுள் நம்பிக்கை அடிப்படையில் கருத்துகள் கூறுவது.

கடவுள் உருவமற்றது, கருணையே வடிவமானது, அது உலகைப் படைத்து இயக்குகிறது என்றும், அதுவன்றி ஓர் அணுவும் அசையாது; எல்லாம் அதன் செயல் என்றும் கடவுளை நம்புகின்றவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், கடவுளுக்கு மனிதனைப் போல உருவம் கற்பித்து, மனைவி, பிள்ளைகள் உண்டு என்று சொல்லி கதையும் கூறுகின்றனர். இவை மேலே சொன்ன கடவுள் பற்றிய கருத்துக்கு எதிரான கருத்துகள்.

கடவுளை நம்பும் எவரும் கடவுளைப் பார்த்ததில்லை. எனவே, உலகில் ஒவ்வொரு பகுதியிலும் கடவுளைப் பற்றி வேறு வேறு நம்பிக்கைகள், கருத்துகள் கூறப்பட்டன. அதனால், உலகில் பல மதங்கள் பல பகுதிகளில் உருவாக்கப்பட்டன. எனவே, மதக் கருத்துகளும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டன.

ஒரு மதம் கடவுளுக்கு உருவம் இல்லை என்றது; மற்றொன்று கடவுள் மனிதனாக வந்து போதித்தார் என்றது.

மக்களை நல்ல வழியில் நடத்த, அன்பை வளர்க்க வேண்டிய மதங்கள் அதற்கு மாறாக நடைமுறையில் செயல்பட்டன.

மதங்களுக்கிடையே மோதல், சண்டை, கொலை. உலகில் மதச் சண்டையால் அழிந்தவர்களே அதிகம்.

இந்தியாவில் சிவனையும், திருமாலையும் வணங்கியவர்கள் மோதிக் கொள்கின்றனர். இந்த இருவரும் சமணர்களை ஆயிரக்கணக்கில் அழித்தனர். சமணர்கள் கட்டிய கோயில்களை இடித்தனர்.

இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு இஸ்லாமியர் மசூதியை இடித்தனர். சிலுவைப் போர்கள் வரலாற்றில் மத மோதலைக் காட்டுகின்றன. மதத்தைக் காப்பாற்ற, வளர்க்க கொலை வெறி கொண்டு, கூர்வாள் ஏந்தி, குண்டுகள் வெடித்து கொன்று குவிக்கின்றனர். இஸ்லாமியர்களுக்குள்ளே இரு பிரிவாக மோதிச் சாகின்றனர்.

அன்பைப் போதித்த புத்தர் கொள்கையை ஏற்றுக் கொண்ட சிங்களர்கள் தமிழ் இனத்தையே கொலை வெறி கொண்டு அழித்தனர்.

புத்தம் உயிர்களை நேசிக்கச் சொன்னது. ஆனால், புத்தரை வணங்கி அவர் கொள்கையைப் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள் கொலை வெறி கொண்டு அலைகின்றனர்.

மதம் மக்களிடம் அன்பை வளர்த்திருந்தால், இப்படியெல்லாம் நிகழுமா?

அக்காலத்தில் மட்டுமல்ல; இக்காலத்திலும் மதவெறி கொண்டு ஒருவரையொருவர் அழித்துக் கொள்கின்றனர் என்றால், மதம் அன்பை, கருணையை, பாசத்தை வளர்த்தது என்று எப்படிக் கூற முடியும்?

மதம் மனித நேயத்தை, மனிதப் பற்றை, உயிர் நேயத்தை, உறவை, ஒற்றுமையை வளர்த்திருந்தால் மத மோதல்களே வரக் கூடாதே! மதம் பாசத்தை வளர்த்திருந்தால் எல்லா மதத்தவரும் உடன் பிறந்தவர்களாய் ஒன்றுபட்டல்லவா வாழ்வர்? மதம் கருணையை வளர்த்திருந்தால் மனித ஒற்றுமை ஓங்கி வளர்ந்திருக்குமே! ஆனால், இவையெல்லாம் வளரவில்லை.

எனவே, மதம் மனிதப் பற்றை வளர்க்கவில்லை; மத வெறியை, மத மோதலை, மத வெறியைத்தான் வளர்த்திருக்கிறது.

பகுத்தறிவுச் சிந்தனை தான் உலகில் மனித நேயத்தை வளர்க்கிறது. மதவாத மோதல்களை ஒழிக்கப் போராடுகிறது. நவீன உலகைப் படைக்கிறது.

32
பாப்பி என்னும் பாப்பிபாப்பி என்னும் பாப்பி1st August 2021
வரலாறு - பல்லாயிரம் ஆண்டுத் தொடர்பு: கீழடியும் பெட்ராவும்1st August 2021வரலாறு - பல்லாயிரம் ஆண்டுத் தொடர்பு: கீழடியும் பெட்ராவும்

மற்ற படைப்புகள்

16
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th September 2024 by அன்பெழில்

பதிவு – 2: எங்கும் பெரியாரைப் பேசுவோம்!

Read More
2021_oct_v21
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
28th September 2021 by ஆசிரியர்

சாதனைப் பிஞ்சு: இரண்டு வயதில் மூன்று விருதுகள்

Read More
2020_dec_v15
டிசம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
28th December 2020 by ஆசிரியர்

சாக்பீசில் பெரியார் சிலை

Read More
2021_sep_v30
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
2nd September 2021 by ஆசிரியர்

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கியை உச்சத்துக்குக் கொண்டு சென்ற சிங்கப் பெண்கள்

Read More
2022_april_32
ஏப்ரல் 2022பிஞ்சுகள் பக்கம்
4th April 2022 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்!

Read More
9
ஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
5th April 2025 by `சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – 9 : தாத்தா பாட்டிகளுக்கு உதவும் ரோபோ!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p