• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தொடர் கதை – 2 : வழக்குரைஞரிடம் வாதிட்ட எலுமிச்சை

2023_feb_20
கதைபிப்ரவரி2023

வழக்குரைஞர் வீட்டிற்கு வந்து சேர்ந்த பழனிவேல், எலுமிச்சைப்பழத்தை எடுத்து மேசைமீது வைத்தார்.
“என்ன பழனிவேல், எலுமிச்சையோடு வந்திருக்கீங்க!’’ வழக்குரைஞர் கேட்டார்.
“எலுமிச்சைப்பழம் பொதுநல வழக்கு போடப்போகுதாம். அதுக்குத்தான் உங்களிடம் வந்தேன்!’’ பழனிவேல் சொல்ல, வியப்போடு நோக்கினார் வழக்குரைஞர்.
ஆமாம் அய்யா, நான் பொதுநல வழக்குப் போடத்தான் உங்களிடம் வந்தேன்!’’ என்று இடையில் குறுக்கிட்டு எலுமிச்சை கூறியதும், வழக்குரைஞருக்கு மேலும் அதிர்ச்சி!
“என்ன வழக்கு?’’ வழக்குரைஞர் கேட்க, “உணவுக்குப் பயன்படவேண்டிய என்னை, பலி, காவு, திருஷ்டி கழிப்பு என்று தெருவில் நசுக்கிப் பாழாக்குகிறார்கள். உணவுப் பொருளைப் பாழாக்குவது குற்றம் என்பதால், பொதுநலன் கருதி இச்செயல்களைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடரவேண்டும்’’ என்றது எலுமிச்சைப்பழம்.
“விசித்திர வழக்காக இருக்கிறதே!’’ வழக்குரைஞர் திகைத்துப் பேசினார்.
“விசித்திர மனிதர்கள் வாழும் நாட்டில் வழக்கும் விசித்திரமாகத்தானே இருக்கும்! நான் வழக்குத் தொடுப்பது நல்ல நோக்கத்தில் தானே?’’ எலுமிச்சை விளக்கம் அளித்து வினாவும் எழுப்பியது.
“உனது வழக்கு நியாயமானது! ஆனால், புதுமையானது. இப்படியொரு வழக்கை எந்த வழக்குரைஞரும், எந்த நீதிமன்றமும் சந்தித்தது இல்லை!’’
இதற்கு முன்னுதாரணம் இருக்கு.

“தன் கன்றைத் தேரேற்றிக் கொன்ற இளவரசனுக்கு எதிராய், மன்னனிடம் பசு நீதி கேட்டது என்று கதை கூறப்படுகிறது அல்லவா?’’
“ஆமாம்’’
“இப்போது எலுமிச்சை நீதி கேட்கிறது. காலவளர்ச்சிக்கு ஏற்ப இது நடக்கத்தானே செய்யும்!”
“சிறப்பாக வாதம் செய்கிறாயே! உனக்கு வழக்குரைஞரே தேவையில்லையே!’’ என்று வழக்குரைஞர் கூற,
“உண்மைதான். ஆனால் சட்டப்படி சிலவற்றைச் செய்துதானே வழக்குத் தொடர முடியும்? அதற்கு வழக்குரைஞர் தேவைதானே!’’ என்றது எலுமிச்சை.
“உண்மைதான். வழக்கில் நீ கேட்கும் தீர்வு என்ன? நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைக்க வேண்டும்!’’
“எலுமிச்சைப் பழத்தைக் காவு, பலியென்கிற பெயரில் பாழாக்குவதை நீதிமன்றம் தடை செய்ய வேண்டும்’’ இதுதான் எனது முதன்மையான வேண்டுகோள்.
“சரி. நான் வழக்குக்குரிய ஆவணங்களைத் தயார் செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிடுகிறேன். நீதிமன்றத்திற்கு வந்துவிடுங்கள்’’ என்று வழக்குரைஞர் கூற,
எலுமிச்சை விடைபெற்றது.
வழக்குரைஞர் பழனிவேலுவிடம், “வழக்குத் தேதி குறிக்கப்பட்டதும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நீதிமன்றத்திற்கு எலுமிச்சையோடு வந்துவிடுங்கள்.” என்றார்.
***

நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஏற்கப்பட்டு, தேதியறிவிக்கப்பட்டதும், பழனிவேலுவிடம் வழக்குரைஞர் தெரிவிக்க, எலுமிச்சையை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்குச் சென்றார் பழனிவேல்.
செல்லும் வழியில் ஒரு பூசணிக்காய் எலுமிச்சையைப் பார்த்து வணக்கம் சொன்னது. பதிலுக்கு எலுமிச்சையும் வணக்கம் சொன்னது.
“எங்கே புறப்பட்டுப் போறீங்க!’’
“நான் நீதிமன்றத்திற்குப் போறேன்!’’
“என்ன, நீதிமன்றத்திற்கா!’’
“ஆமாம். என் வழக்கு இன்று விசாரணைக்கு வருது. அதுக்குத்தான் பழனிவேல்கூட போய்க்கிட்டிருக்கேன்.’’
“எனக்கு ஒண்ணும் புரியலையே! கொஞ்சம் புரியும்படி சொல்லேன்!’’
உணவுக்குப் பயன்படுற என்னை, சாலையில் நசுக்கிப் பாழாக்கிறத தடைசெய்யணும்னு பொதுநல வழக்குப் போட்டிருக்கிறேன். அதுக்குத்தான் போறேன்.
“அப்படியா! நல்ல வழக்காச்சே! “அப்படின்னா நானும் இந்த வழக்கிலே சேர்ந்துக்கிறேன். என்னையுந்தானே சாலையில் உடைத்துப் பாழாக்குறாங்க! அதையும் தடுக்க நானும் வழக்கில் சேர்ந்துகொள்கிறேன். பழனிவேல் அய்யா, என்னையும் வழக்குரைஞரிடம் அழைத்துச் செல்லுங்கள்!’’ என்றது பூசணிக்காய்.
“சரி, நீயும் எங்களோட வா! வழக்குரைஞரிடம் சொல்வோம்.’’
மூவரும் நீதிமன்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒருவர் எதிர்ப்பட்டார். மண்டை உடைந்து கிடந்த அவரைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
(வழக்கு வளரும்)

 

29
கணக்கும் இனிக்கும் : எல்லாக் கோட்டையும் அழிங்ககணக்கும் இனிக்கும் : எல்லாக் கோட்டையும் அழிங்க2nd February 2023
‘A’ to ‘Z’ shortcuts2nd February 2023‘A’ to ‘Z’ shortcuts

மற்ற படைப்புகள்

2020_jun_v8
கதைகதை கேளு கதை கேளுஜூன் 2020
4th June 2020 by விழியன்

பசிக்குமில்ல

Read More
2020_aug_v21
ஆகஸ்ட் 2020கதை
1st September 2020 by ஆசிரியர்

படக்கதை: நாத்திகப் பெருங்கவிஞன் பி.பி.ஷெல்லி

Read More
2017_may_s5
கதை கேளு கதை கேளுமே
5th May 2017 by விழியன்

கானக்குயிலும் கனராஜனும்

Read More
2022_feb_v33
கதைகதை கேளு கதை கேளுபிப்ரவரி 2022
5th February 2022 by விழியன்

மவுனத்தின் மிரட்டல்

Read More
24
கதைசிறார் கதைசெப்டம்பர் 2023பிஞ்சு 2023
9th September 2023 by வசீகரன்

சிறார் கதை : சிம்புவுக்குக் கால் கொடுத்த அப்பு!

Read More
2021_oct_v6
அக்டோபர் 2021கதை
28th September 2021 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை : உறுதி வாய்ந்த உயிரினம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p