• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இடர்மீட்புத் தொடர் : மீள்வோம்!மீட்போம்! புயலுக்குப் பின்

2023_June_2
சூழலியல்ஜூன் 2023

தே.பொய்யாமொழி

பேரிடர் கடந்த இரண்டு கட்டுரைகளில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் பற்றிப் பார்த்தோம். அந்த வரிசையில் இக் கட்டுரையில் புயல் (cyclone) பற்றித் தெரிந்து கொள்வோம். புயல் எப்படி உருவாகிறது? அல்லது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பன பற்றிப் பார்ப்போம்.
புயல் கடல் பகுதியில் மட்டுமே உருவாகும்; நிலப்பரப்புகளில் உருவாகாது. ஆனால், கடலில் இருந்து கரையைக் கடந்து நிலத்தின் உள்ளே வரும். கடலின் உள்ளே சேதத்தை ஏற்படுத்தாது, கரையைக் கடந்து உள்ளே வரும் பொழுது அதன் வேகத்திற்கு ஏற்ப சேதங்களை ஏற்படுத்தும்.
எப்படி புயல் உருவாகிறது? கடல் நீர் நன்றாகச் சூடாகும் பொழுது (குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ்) அந்த இடத்தில் உள்ள காற்று சூடாகிறது. சூடான காற்று மேல்நோக்கிச் செல்லும்.

அதற்கு காற்று அழுத்த உயர்வு நிலை என பெயர். கடலின் மேற்பரப்பிலிருந்து மேல்நோக்கி காற்று சென்றவுடன் அந்த இடத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படும். அந்த வெற்றிடத்தை அருகில் உள்ள காற்று வந்து நிரப்பி விடும். பிறகு அந்தக் காற்றும் சூடாகி மேலே செல்லும். இவ்வாறு தொடர்ந்து செயல்படும் பொழுது புயல் உருவாகும்.
ஒரு முறை புயல் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு குட்டி சுட்டிப் பையன் கேட்டான், “கடல் உள்ளேயே புயல் இருக்கு இருக்குன்னு சொல்றாங்களே அங்கே பெரிய ஃபேன் (fan) கொண்டு போய் வச்சு அந்தப் புயல் காத்தை அப்படியே கலைத்து விட்டால் என்ன சார்?’’
அவனுடைய அறிவுக்குத் தோன்றிய யோசனை. அதில் தவறு ஒன்றும் இல்லை. இந்தப் புயல் எனப்படுவது சுமார் 15 கிலோ மீட்டருக்கும் மேல் உயரமாகவும் பல நூறு கிலோமீட்டர் நீள, அகலத்திலும் இருக்கும். அதனால் தான் அவ்வளவு பெரிய நீர் நிலை நிலப்பகுதியில் இல்லாததனால் கடலில் மட்டுமே தோன்றுகிறது. இப்ப யோசிச்சுப் பாருங்க. மின்விசிறி வச்சு அதைக் கலைக்க முடியுமா? அவ்வாறு ஏற்படும் காற்றுச் சுழல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கரையைக் கடக்கும் பொழுது பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தோம்.
அதன் வேகம் மணிக்கு
= 1. 39 கிலோ மீட்டருக்கும் கீழே இருந்தால் அதற்கு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எனப் பெயர்.
= 31-49 கிமீ வேகத்தில் வந்தால் அதற்கு காற்றழுத்தத் தாழ்வும் மண்டலம் எனவும்
= 50-61 வரை ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் எனவும்
= 62-88 வரை புயல் எனவும்
= 89-118 வரை தீவிரப் புயல் எனவும்
= 119-221 வரை மிகத் தீவிரப் புயல் எனவும்
= 221 – கி.மீக்கு மேல் சென்றால் மாபெரும்

புயல் எனவும் அதன் வேகத்தை வைத்து ஏழு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். புயல் வருவதை அறிந்து கொள்வதற்கு டாப்ளர் வெதர் ராடார் (DOPPLER WEATHER RADAR) உள்ளது. அதன் மூலம்
காற்றின் வேகத்தைக் கணித்து வானிலை ஆய்வு மய்யம் நமக்குத் தகவல் தெரிவிக்கும். கடற்கரை ஓரங்களில் காற்றின் வேகத்திற்கு ஏற்ப புயல் எச்சரிக்கைக் கூண்டு அல்லது கொடி ஏற்றப்படும். அதை வேகத்திற்கு ஏற்ப 11 பிரிவுகளாகப் பிரித்து உள்ளனர். அவ்வாறு வரும் ஒவ்வொரு புயலுக்கும் ஒரு பெயர் வைத்துள்ளனர். முன்பு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து போன்ற எட்டு நாடுகளும் தொடர்ந்து சுழற்சி முறையில் 88 பெயர்கள் கொடுத்து வைத்துள்ளனர். அதற்குப் பிறகு இப்பொழுது மேலும் அய்ந்து நாடுகள் சேர்ந்து 13 நாடுகள் அந்த வரிசையில் உள்ளன.
ஒரே ஒரு புயலின் அழிவுகளைப் பற்றிப் பார்ப்போம். 12.11.2018 இல் உருவாகி 16.11.2018 கரையைக் கடந்த கஜா புயல் அதில் 45 பேர் மரணம் அடைந்தனர். 732 கால்நடைகள் இறந்தன. ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்தன. 56 ஆயிரம் கூரை வீடுகள் முழுதும் பாதிக்கப்பட்டன. 30,000 கூரை வீடுகள் ஒரு பகுதி பாதிப்படைந்தன. 30,000 ஓட்டு வீடுகள் பாதிப்படைந்தன. ஒரு லட்சத்து 10 ஆயிரம் மின் கம்பங்கள் முறிந்து விழுந்து நாசமாகின. ஆயிரக்கணக்கான மீட்டர் மின் கம்பிகள் அறுந்து சேதமடைந்தன. 81 ஆயிரம் பேர்களுக்கு மேல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சாதாரணமாகச் சொல்லப்படும் காற்றின் வேகத்தைப் பாருங்கள்.

சரி, புயல் வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படித் தற்காத்துக் கொள்வது?
புயல் கரையைக் கடக்கும் பொழுது அதிகப் பாதிப்பு கடற்கரை யோர மக்கள் மற்றும் கடற்கரை யோர மாவட்டங்களுக்குத் தான். எனவே, பாதிப்பு ஏற்படுத்தும் என்று அறியப்படும் பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விடுவர். மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு விடும். கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து மக்களுக்குப் புயல் குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்குவார்கள். அதைப் பின்பற்றி நாம் நடக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பெரிய பாதிப்புகளில் இருந்து நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். 
(மீட்போம்)

16
”கல்வியே உயர்செல்வம்””கல்வியே உயர்செல்வம்”8th June 2023
பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி10th June 2023பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

மற்ற படைப்புகள்

2023_June_15
ஜூன் 2023பழகுமுகாம்பிஞ்சுகள் பக்கம்
10th June 2023 by ஆசிரியர்

பழகுமுகாம் : எழுபத்து நான்கு பிஞ்சுகள்! எத்தனை ஆயிரம் நினைவுகள்?

Read More
2023_June_27
ஜூன் 2023
10th June 2023 by பாவலர் மலரடியான்

கற்போம் பணி செய்வோம்

Read More
12
சூழலியல்ஜூலை 2023பிஞ்சு 2023
20th July 2023 by சரவணா இராஜேந்திரன்

இயற்கை : அரிக்கொம்பன் ஓர் அழகிய விருந்தாளி

Read More
2023_June_7
அறிவியல்ஜூன் 2023
10th June 2023 by ஆசிரியர்

புதிய தொடர் : மனிதரை விஞ்சுமா செயற்கை நுண்ணறிவு?

Read More
2023_april_24
ஏப்ரல் 2023சூழலியல்மீள்வோம் மீட்போம்
5th April 2023 by ஆசிரியர்

மீள்வோம் மீட்போம்

Read More
17
சூழலியல்ஜூலை 2024பிஞ்சு 2024
16th July 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 5 : பனங்காடை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p