• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செ.நு. தொடர் – 8 : எந்திரக் கற்றல்

5
அறிவியல்பிஞ்சு 2024பிப்ரவரி 2024

‘சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

மனிதர்கள் ஏன் சிந்திக்கிறார்கள்? அவர்கள் சிந்தனைக்கு முக்கியமான காரணம் என்ன? அவர்கள் தங்களைச் சுற்றி இருப்பதிலிருந்து கற்றுக் கொகிறார்கள். மொழியைக் கற்றுக் கொள்கிறார்கள். சமூகத்தைப் பற்றிக் கற்றுக் கொள்கிறார்கள். சமூகத்துடன் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொள்கிறார்கள். அப்படி எந்திரங்களும் சிந்திக்க வேண்டும் என்றால் அவையும் தகவல்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்தத் துறையைத் தான் எந்திரக் கற்றல் (Machine Learning) துறை என அழைக்கிறார்கள்.

ஆனால், இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், மனிதர்கள் எப்படி கற்றுக் கொள்கிறார்களோ அதே போல எந்திரங்கள் கற்றுக் கொள்வதில்லை. மாறாக இங்குக் கொடுக்கப்படும் தகவல்களில் இருந்து சில லேபிள்களைத் தான் எந்திரங்கள் கற்றுக் கொள்கின்றன.
இப்போது ஓர் எந்திரத்திடம் நீங்கள் காட்டும் ஒளிப்படம் நாய்க்குட்டியா அல்லது யானைக் குட்டியா என்று கண்டுபிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அந்த ஒளிப்படங்களுக்கு மனிதர்கள் லேபிள் செய்வார்கள். ‘இது மூக்கு, இது காது, இது தும்பிக்கை’ என்று. மூக்கு சிறிதாக இருந்தால் அது நாய்க்குட்டி, மூக்கு பெரிதாக இருந்தால் அது யானைக் குட்டி என்று இரு ஒளிப்படங்களில் உள்ள தகவல்களை எல்லாம் முன்பே மனிதர்கள் லேபிள் செய்து வைத்து விடுவார்கள். இந்த ஒளிப்படங்களையும் லேபிள்களையும் நீங்கள் கணினிக்கு உள்ளிட (Input) வேண்டும்.

என்ன, இப்படி இரண்டு ஒளிப்படங்களை உள்ளிட்டால் கணினி கற்றுக் கொள்ளுமா என நீங்கள் கேட்கலாம்?
இல்லை இப்படியாக ஒரு பத்தாயிரம் ஒளிப்படங்களை யாவது உள்ளிட வேண்டும். நீங்கள் எத்தனை ஆயிரம் ஒளிப்படங்களை அதிகமாக உள்ளிடுகிறீர்களோ அந்த அளவிற்கு ஓரளவு எந்திரங்கள் சரியான விடையை அளிக்கும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பு அத்தனை புகைப்படங்களையும் மனிதர்கள் லேபிள் செய்து வைத்திருக்க வேண்டும். வருங்காலத்தில் கணினிகளுக்குக் கற்றுக் கொடுக்க உதவும் இந்தப் பணி கூட வந்துவிடும்.

நீங்கள் உள்ளிடும் ஆயிரக்கணக்கான ஒளிப்படங்களில் லேபிள்களில் இருந்து கணிதத்தின் உதவியுடன் அந்த அல்காரிதங்கள் தகவல்களைப் பிரித்தெடுத்து, பகுப்பாய்வு செய்து, தான் கற்றுக் கொண்ட பதிலை உங்களுக்குச் சொல்லும். அந்தப் பதில் சரியா தவறா என்று மீண்டும் கணினிக்கு நீங்கள் சொல்ல வேண்டும்.

சரியா தவறா என்பதிலிருந்து கணினி மீண்டும் தன் அல்காரிதங்களை ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளும். மீண்டும் ஒளிப்படங்களைப் பிரித்து பகுத்தாய்ந்து கற்றுக் கொள்ள முடியும். சரியான விடையைச் சொல்லும் வரை கணினி இந்த வழிமுறைகளை மீண்டும் மீண்டும் செய்யும். இப்படியாக ஆயிரக்கணக்கான ஒளிப்படங்களைக் கொடுத்து ஒரு கணினிக்கு எது நாய்க்குட்டி எது யானைக் குட்டி என்பதை ஓரளவு நீங்கள் கற்றுக் கொடுத்து விட முடியும்.
இந்த உதாரணத்தை வைத்துக் கொண்டே கணினிக்கு ஒளிப்படங்கள் மற்றும் மனிதர்கள் கொடுக்கும் லேபிள்களின் உதவியுடன் பல தகவல் அல்லது செய்திகளைக் கற்றுக் கொடுக்கலாம். அப்படி கற்றுக் கொடுப்பதில் உள்ள நன்மை தீமைகளைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.<

18
வெல் வெல் வெல்!வெல் வெல் வெல்!7th February 2024
சின்னகைச் சித்திரம்7th February 2024சின்னகைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

32
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th September 2024 by ஆசிரியர்

நிழல்களில் உயிர்!

Read More
அறிவியல்ஜூலை 2023பிஞ்சு 2023
20th July 2023 by அபி

துணுக்குச் சீட்டு – 9 : ‘அணு’வா? ‘செல்’லா?

Read More
2023_June_7
அறிவியல்ஜூன் 2023
10th June 2023 by ஆசிரியர்

புதிய தொடர் : மனிதரை விஞ்சுமா செயற்கை நுண்ணறிவு?

Read More
9
அறிவியல்செப்டம்பர் 2024பிஞ்சு 2024
2nd September 2024 by வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – 2 : A1 டாக்டர்

Read More
16
அறிவியல்ஏப்ரல் 2024
2nd April 2024 by ‘சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

செ.நு. தொடர் – 10: இறுதி அல்ல தொடக்கம்…

Read More
2022_feb_v2
அறிவியல்பிப்ரவரி 2022
1st February 2022 by ஆசிரியர்

பிஞ்சுகளே… பிஞ்சுகளே…! மனிதனுக்குள் துடிக்கும் பன்றி இதயம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p