• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

துணுக்குச்சீட்டு

2022_dec_33
அறிவியல்டிசம்பர் 2022

விசிறி, விரல், பூஞ்சை → எப்ப்டி→ சுத்துது, சுருங்குது,வீங்குது,வளருது

அபி

நல்ல வெயிலில் வெளியே போய், அந்த உச்சி வெயிலினை ரசிச்சு அனுபவிச்சிட்டு (உங்க மைண்ட்வாய்ஸ் கேக்குது, ஆனாலும், மழையை மட்டுமே ரசிச்சா, வெயில் பாவம் துக்கப்படும்ல..) அதனால, அதையும் ரசிப்போமே… வீட்டுக்கு வந்ததும் மின்விசிறியைப் போட்டு அப்பாடான்னு உட்காரும்போது வரும் சுகம் இருக்கே!! சும்மா ஒரு மூன்று இறக்கைகள் சுற்றுகிறது. ஆனா, எப்படி அந்தக் காற்று வருது?

மின்விசிறியில் இருக்குற இறக்கைகள் சமதளமாக -_ தட்டையாக இல்லாம, கொஞ்சம் சாய்ந்து இருக்கும். மின்விசிறி அதற்குக் கீழே இருக்கும் காற்றை மேலிழுத்து மீண்டும் தரைக்குத் தள்ளும். இப்படித் தள்ளுவதால், காற்றோட்டம் அதிகமாகுது. பொதுவா, குளிர்ந்த காற்று மின் விசிறிக்குக் கீழே தரைக்கு அருகிலும், சூடாக இருக்கும் காற்று குளிர்ந்த காற்றுக்கு மேலாகவும் அடுக்கடுக்கா இருக்கும். மின்விசிறி, இப்படி அடுக்கடுக்கா இருக்கும் காற்றை மேலிழுத்து கீழே தள்ளும்போது, இந்த அடுக்குகள் எல்லாம் கலந்துடுது. அதனால, சமஅளவில் காற்றோட்டம் இருக்கிறது.
எல்லாம் சரி, இதுல சாய்வான இறக்கைகளுக்கு என்ன வேலை? அது சமதளமாக -_ தட்டையாகவே இருந்து இருக்கலாமே? அதான் இல்லை. இறக்கைகள் அப்படி இருந்துச்சுனா, அவை சுற்றும்போது, காற்றைக் கிழித்துக்கொண்டு போகும். ஆனால், இதே இறக்கைகள் சற்று சாய்ந்த நிலையில் இருந்தால், அது சுற்றும்போது காற்றை கீழே உத்தித் தள்ளும். இதனால், காற்றோட்டம் உருவாகும்.

நாம் பயன்படுத்தும் கை விசிறியைத் தரைக்குச் சமாந்தரமாக _ இணையாக (Parallel) வச்சு விசிறினால், காற்று வராது. ஏன்னா, அது காற்றைக் கிழித்துக்கொண்டு போகுது. அதுவே, விசிறியை சாய்வா வைத்து விசிறும்போது, காற்று உந்தித் தள்ளப்படுது. அதனாலதான். நமக்குக் காற்று வருது.
இந்த அடிப்படையில் தான் மின்விசிறியின் இறக்கை சுமார் 100 -முதல் 150 வரை சாய்வு நிலையில் வடிவமைக்கப்படுது. அது ஏன் 3 இறக்கைகள் மட்டும் இருக்கு? சொல்லுங்க, ஏன் என்று!

மழைக்காலத்துல, நம்ம துணிகள் மாதிரி நல்ல அஃறிணையைப் பாக்குறது ரொம்பக் கடினமான ஒன்று. ஏன்னா, அது பல உயிர்கள் அதன்மீது வளர உதவும். ஆமாம், நான் ஈரத்துணிகள் மேல இருக்குற பூஞ்சைகளைப் பற்றிதான் சொல்றேன். எப்படி வளருது இந்தப் பூஞ்சைகள்?

பூஞ்சை (Fungi) குடும்பத்தின் விஷீறீபீ எனும் பூஞ்சை வகையின் விதைத்தூள் காற்றில் எங்கும் பரவி இருக்கும். இந்தப் பூஞ்சை வளர விதைத்தூள், உணவு, வெப்பநிலை, ஈரப்பதம் ஆகிய நான்கும் மிக முக்கியமா இருக்கு. இதுல ஒன்று இல்லைன்னாலும் பூஞ்சை வளராது. துணிகள் மேல வளரும் பூஞ்சையின் பெயர் Aspergillus. இதுவும் Mold வகையைச்  சார்ந்தது. மழைக்காலத்தில் ஈரத்துணிகளில், பூஞ்சை வளரத் தேவையான ஈரப்பதம் இருக்கும். பொதுவா பருத்தித் துணியின்மீது பூஞ்சைகளைப் பார்க்க முடியும். ஏனென்றால், பருத்தி, ஒரு கரிமப் பொருள் (Organic material). பூஞ்சைகள், கரிமப் பொருள்களின் மீது நொதிகளைச் (Enzymes) சுரந்து, அவற்றின் சத்தை உறிஞ்சி தங்களுக்கான உணவாக்கிக் கொள்ளுது!

என்னதான், அந்தப் பூஞ்சைக்கு நம்ம துணி உதவினாலும், அவை நமக்கு நுரையீரல் நோய் மற்றும் தோல் நோயை வரவைக்கும். அதனால துவைத்த உடனே, துணிகளை வெயிலில் காயப்போட்டுடுங்க.

விறுவிறு என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கிட்டு, கதவை வேகமாகச் சாத்தும்போது, கையை நசுக்கிட்டு இருப்போம். அவசரத்துல, கையை உதறிக்கிட்டே போய்விடுவோம். ஆனால் கணநேரத்துல அடிபட்ட விரல், ‘டொய்ங்’ என்று வீங்கிவிடும். எப்படி அவ்வளவு விரைவில் வீங்குது?

உடலில் எந்த இடம் அடிபட்டாலும் அங்கு இருக்கும் தசையில் சேதம் ஏற்படும். அப்படி சேதமடைந்த தசையைக் குணமாக்க நம்ம உடல் வேலைகளை ஆரம்பிக்கும். சேதமடைந்த தசையில் இருக்கும் இறந்த உயிரணுக்கள் உடனடியாக வெளியேற்றப்படும். அப்போது, அந்த இடம், சிவப்பா, சூடா மாறும். இதை அழற்சி (Inflammation)  என்று சொல்லுவோம். சேதமடைந்த தசை இருக்கும் இடத்தில் முதலில் இரத்த ஓட்டம் அதிகமாகும். இதனாலதான், அந்த இடம் சிவக்குது. அடுத்து வெள்ளையணுக்கள், புரதம் போன்றவை அந்த இடத்திற்கு மூளையால் விரைந்து அனுப்பப்படும். சேதமடைந்த தசை இருக்கும் பகுதியில் ஒரே இடத்தில் வெள்ளம் போல இந்தத் திரவம் எல்லாம் கணநேரத்தில் வந்து சேர்வதாலதான் அங்க அவ்வளவு சீக்கிரமா வீக்கம் ஏற்படுது.

 

18
மருத்துவக் குறிப்பா?மருத்துவக் குறிப்பா?5th December 2022
முடநம்பிக்கை போச்சு....5th December 2022முடநம்பிக்கை போச்சு....

மற்ற படைப்புகள்

2022_dec_33
அறிவியல்டிசம்பர் 2022
5th December 2022 by ஆசிரியர்

துணுக்குச்சீட்டு

Read More
2020_sep_v24
அறிவியல்செப்டம்பர் 2020
3rd October 2020 by ஆசிரியர்

அறிவியல்: மனிதர்களைப் போல் விலங்குகளுக்கும் சளி, காய்ச்சல் வருமா?

Read More
25
அறிவியல்ஜனவரி 2025பிஞ்சு 2025
6th January 2025 by `சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – 6: கூகுளின் க்வாண்டம் சிப் புரட்சி செய்யுமா?

Read More
2023_april_17
ஏப்ரல் 2023கணக்கும் இனிக்கும் (தொடர்)
4th April 2023 by ஆசிரியர்

கணக்கும் இனிக்கும்

Read More
29
அறிவியல்ஜூலை 2023பிஞ்சு 2023
20th July 2023 by ப. மோகனா அய்யாதுரை

அது என்ன நிலா வரைபடம் ?

Read More
2022_dec_41
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p