நிலவைத் தொட்டவருக்கு வீரவணக்கம்
![2012_september_periyarpinju-4](https://periyarpinju.com/wp-content/uploads/2012/09/2012_september_periyarpinju-4.jpg)
பூமியின் துணைக்கோளான நிலவைப் பற்றிப் பொய்யும் புரட்டுமாகக் கதை சொல்லிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்த காலத்தில், அறிவியல் வளர்ச்சியின் விளைவாக நிலவில் மனிதன் காலடியைப் பதித்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். கடந்த நூற்றாண்டில் மனித குலத்தின் மாபெரும் பாய்ச்சல் இது! மனித அறிவியல் சாதனைகளின் உச்சமாகவும் இதனைக் கருதலாம். அத்தகைய சாதனையாளரான நீல் ஆம்ஸ்டிராங் 2012 ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி மறைவுற்றார். நமக்கு இப்படிப்பட்ட மனிதர்கள்தானே கனவு நாயகர்களாக இருக்க வேண்டும். அந்த மாபெரும் சாதனையாளனுக்கு நமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.