• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல! : வேற்றுலக வாசிகள் வாழ்ந்த இடமா?

2022_August_19
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்

உண்மைக்குப் புறம்பான, கற்பனைக் கதைகளுக்கு பஞ்சமில்லாத உலகம் இது.

கற்பனை உலகத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று மேற்குலகம்; மற்றொன்று கிழக்கு உலகம். அதாவது, அய்ரோப்பா, அமெரிக்கா போன்றவை மேற்குலகம்; ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்றவை கிழக்கு உலகம்.

கிழக்கு உலகக் கதைகள் பெரும்பாலும் மூடநம்பிக்கை மற்றும் மதக்கோட்பாட்டின் அடிப்படையில்  உள்ளவை. மேற்குலகம் அறிவியல் மற்றும் பகுத்தறிவில் சிறந்துவிளங்கும் காரணத்தால் அங்கேயும் அறிவியல் உண்மைகளை கதைகளாகத் திரித்துக்கூற ஒரு கூட்டம் உருவாகிவிட்டது
அப்படிக் கூறும் கதைகளில் வேற்றுலக மனிதர்கள், பறக்கும் தட்டு, பிளாமா ரேய்ஸ் மனிதர்களை உருமாற்றும் இன்ன பிற கதைகளைக் கூறுவார்கள்.

இவர்கள் சில இயற்கை நிகழ்வுகளையும் அறிவியல் கதைகளோடு ஒப்பிட்டுக்கூறி நம்பவைப்பார்கள்.

அப்படி அவர்கள் கூறும் ஒரு கதைதான் இங்கொரொங்கோரோ பள்ளத்தாக்கு பற்றியது. ஆப்ரிக்காவில் தான்சானியா நாட்டில் உள்ளது இந்தப்  பள்ளத்தாக்கு.

பொதுவாக, குளங்கள் வற்றிய பிறகு சுற்றிலும் குளத்துமேடு, நடுவில் பள்ளம், அங்கே புற்கள் மற்றும் களைச்செடிகள் வளர்ந்து இருக்கும்,  நாரைகள், கொக்குகள் மற்றும் தண்ணீர் வற்றிய பிறகு அந்த ஈரப்பதத்தில் வளரும் புல் பூண்டுகளயும் அதனும் இருக்கும் பூச்சி புழுக்களையும் உண்ணும் பலவகைப் பறவைகளின் சரணாலயமாகத் திகழும், சென்னையைப் போன்ற பெரு நகரத்தையே உள்ளே விழுங்கும் அளவிற்கு பள்ளம் கொண்ட பகுதி என்றால் அப்படியான ஒரு பள்ளம் தான் இங்கொரொங்கோரோ.

டைனோசர்கள் அழிந்ததற்கு காரணம் பெரிய விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியதால்தான் என்று படித்திருப்பீர்கள். டைனோசர்களுக்கு முந்திய ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய விண்கல் ஒன்று விழுந்ததால் ஏற்பட்ட பள்ளம்தான் இந்த  இங்கொரொங்கோரோ.

பூமியில் இல்லாத, விண்வெளியில் சுற்றிக் கொண்டு இருந்த ஒரு விண்கல் இங்கு விழுந்ததால் இப்பகுதி மண்ணில் இன்றளவும் மெல்லிய கதிர்வீச்சு உள்ளது. அதுமட்டுமல்ல இந்தப் பகுதி மிகவும் செழுமையான பகுதியாக அறிவிக்கப்-பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டின் இங்கொரொங்கோரோ காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் இப்பகுதியில் மனித குடியிருப்புகளுக்கும், வாழ்வாதார வேளாண்-மைக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், மசாய் மேய்ப்பர்கள் இப்பகுதியில் இருந்து வேறிடம் பெயரவேண்டி ஏற்பட்டது.

இந்தப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த பெரும்பாலான பழங்குடியின மக்கள் அந்தப் பள்ளத்தாக்கை விட்டு வெளியே வந்ததே கிடையாது, கி.பி.1800களில் ஜெர்மானிய காலனி ஆதிக்கத்தின் போதுதான் பள்ளத்தாக்கில் பெரிய உலகமே இருக்கிறது என்று அறிந்துகொண்டனர்.

இதற்குப் பெயர் வைக்க அவர்கள் திணறிய போது, சங்கு மற்றும் சிப்பிகளால் செய்யப்பட்ட பெரிய பெரிய மணிகள் கால்நடைகளின் கழுத்தில் கட்டப்பட்டு அவை மேய்ச்சலுக்குச் செல்லும் போது ஏற்படும் ஓசையைக் கொண்டு அப்படியே டிங்கொ ராங் டிங்கோரோங் என்று அழைத்து பின்னர் இங்கொரொங்கோரோ என்று பெயர் சூட்டப்-பட்டதாகச் சொல்கிறார்கள்.

இது தொடர்பான ஒரு நவீன புனைகதை ஒன்று உண்டு.

வேற்றுக் கோள்களில் வாழும் மக்கள் தங்களது பறக்கும் தட்டில் இங்கு வந்து இறங்கினார்கள் என்றும், அப்படி வந்து இறங்கிய வேற்றுக்கோள் வாசிகள் இப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்களை எல்லாம் விலங்குகள் ஆக்கிவிட்டார்கள் என்றும் கூறுவார்கள்.  இன்றும் இப்பகுதியில் கதிர்வீச்சின் காரணமாக வளரும் வித்தியாசமான தாவர வகைகளையும், இப்பகுதியில் மட்டும் காணப்படும் சிலவகை காட்டுப்பூனை மற்றும் மூக்கு நீளமான எறும்புதின்னி போன்றவற்றையும் காட்டி இது எல்லாம் வேற்றுக்கோள் உயிரினங்கள் என்றும் கூறுவார்கள்.

சரியான சட்டங்கள் இல்லாமல் செல்வந்தர்களின் வேட்டைக்காடாக 1900 முதல் 1950 வரை இந்தப் பள்ளத்தாக்கு இருந்தது, இதனால் இப்பகுதியில் பெரும்பாலான வேறுபட்ட உருவங்களைக் கொண்ட விலங்குகள் அழிந்தே போயின. இறுதியாக 1976ஆம் ஆண்டின் வேட்டை விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இங்கோரொங்கோரோ பாதுகாப்புப் பகுதிக்கு என்று தனி அமைச்சரவை உருவானது.

கிண்ணக்குழிப் பகுதி உள்பட இங்கோ-ரொங்கோரோ பாதுகாப்புப் பகுதிக்கு உட்பட்ட பெரும்பாலான நிலங்கள் இந்த அமைச்சரவையின் கீழ் வந்தது.இப்பகுதியின் முக்கியத்துவம் கருதி 1979இல் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் ஆனது.

வேற்றுலகவாசிகள் பூமிக்கு வந்ததற்கு இதுவரை எந்தச் சரியான ஆதாரமும் இல்லை. வேற்றுலகில் உயிர்கள் இருக்கின்றனவா எனத் தொடர்ந்து அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்துகொண்டே உள்ளனர்.

29
மாணவராட்சிமாணவராட்சி2nd August 2022
சிறுவர் கதை2nd August 2022சிறுவர் கதை

மற்ற படைப்புகள்

13
அக்டோபர் 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்
7th October 2023 by ப. மோகனா அய்யாதுரை

12 வயதில் புத்தகம் எழுதிய மலேசியச் சிறுவன்

Read More
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025வரைந்து பழகுவோம்
3rd March 2025 by பி. இளங்கோ

ஓவியம் வரையலாம், வாங்க! : மாம்பழம்

Read More
2021_aug_v34
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்
4th August 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
3
ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
5th June 2024 by சரவணா இராசேந்திரன்

வரலாறு அறிவோம் : காகித வரலாற்றுக்குள் ஒரு காலப் பயணம்

Read More
2021_apr_v12
ஏப்ரல் 2021பிஞ்சுகள் பக்கம்
29th March 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_oct_v18
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
28th September 2021 by ஆசிரியர்

உலக நாடுகள் : கொசாவோ (KOSOVO)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p