• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகள் நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியவை!

2022_August_28
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்

‘இளமையில கல்’ ‘அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது’ ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரையில்’ என்பன போன்ற அனுபவ மொழிகள், குழந்தைப் பருவத்திலே நல்லவற்றைப் பதிக்க வேண்டும்; பழக்க வேண்டும்; பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

எனவே பிஞ்சுகள், பிஞ்சுப் பருவத்திலே நல்ல எண்ணங்களை, பழக்கங்களை, ஒழுக்கங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும். அப்படிப் பின்பற்ற எவை நல்லவை, எவை கெட்டவை, எவை சரி, எவை தப்பு; எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பவற்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பிஞ்சுகள் பின்பற்ற வேண்டியவை இரண்டு வகைப்படும். ஒன்று, தங்கள் வாழ்வு செம்மையாய், உயர்வாய், பாராட்டும் வகையில் அமைய, பின்பற்ற வேண்டியவை; மற்றது, பிஞ்சுகளைச் சுற்றியுள்ளவர்-களிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

தங்களுடைய வாழ்வு சிறக்க பிஞ்சுகள் செய்ய வேண்டியவை:

தன்னம்பிக்கை: காரணம் இல்லாமல், அறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகள்தான் நம்மிடம் கூடாது. மாறாக, தன்னம்பிக்கை கட்டாயம் வேண்டும். நம்மால் முடியும், நமக்கும் எல்லாத் திறமையும் உண்டு என்று உறுதியாய் நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை ஆழ் உள்ளத்தில் பதிந்துவிட்டாலே பாதி வெற்றி பிஞ்சுகளுக்குக் கிடைத்துவிட்டது என்று பொருள். எந்த சூழ்நிலையிலும் எவ்வளவு தோல்வி வந்தாலும் மனம் தளரவோ தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதோ கூடாது.

படிக்கத் தொடங்கும் முன்பே எனக்கு கணிதம் வராது, ஆங்கிலம் புரியாது, வரலாறு தெரியா என்று  ஓர் எண்ணத்தை உள்ளத்தில் உண்டாக்கிக் கொள்வது மிகப் பெருந்தப்பு. எந்த ஒன்றும் வராது என்பது தப்பான எண்ணம். ஆர்வத்தோடு, விருப்பத்தோடும் படித்தால் எல்லா பாடமும் புரிய வரும். வெறுப்பு அல்லது விருப்பம் இன்றிக் கற்றால் அது கடினமாக இருக்கும். அவ்வளவே!

எந்த ஒன்றையும் கற்கத் தொடங்கும்போது அதை விருப்பத்தோடு கற்க வேண்டும். தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தோடு கற்க வேண்டும். கற்கும்போது ஏற்படும் அய்யங்களை ஆசிரியரிடம், பெற்றோரிடம், நண்பர்களிடம் அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அய்யங்களை வைத்துக்கொண்டே மேற்கொண்டு படித்தால் அடுத்ததும் புரியாது. எனவே, அய்யமின்றிக் கற்றால் எந்த ஒன்றும் எளிமை. புரியவில்லையென்றால், தயங்காது, வெட்கப் படாது கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படிக் கற்றால் எல்லா பாடமும் நமக்கு எளிதில் புரிய வரும். எல்லா பாடங்களிலும் அறிவு பெறலாம்.

தொடர் முயற்சி: எந்தவொரு செயலிலும் வெற்றி பெற அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். இடையில் முயற்சிக்காமல் விடுவது வெற்றியைப் பாதிக்கும். அன்றைக்குரிய பாடத்தை அன்றைக்கே படித்துவிட வேண்டும். நாளை படித்துக் கொள்ளலாம் என்று எண்ணக்கூடாது. நாளை என்பது நாளையும் தொடரும். அந்த மனநிலைதான் பிஞ்சுகளின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரும் தடை. பாடச்சுமையை ஏற்றிக் கொண்டே செல்லாமல், ஒவ்வொரு நாளும் படித்து முடித்தால் கற்றல் எளிதாகும்.

கவனச் சிதறல் கூடாது: எந்தச் செயலைச் செய்தாலும் அதில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது அதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும், புத்தகத்தைப் படிக்கும்போது அதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும்.

தாழ்வு மனப்பான்மை கூடாது: தங்களைப் பற்றி ஆணவமும் கூடாது, தாழ்வும் கூடாது. நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை என்பதை நன்றாக மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும். பெரியார் தாத்தா 95 வயதுவரை ஓயாது உழைத்ததும், ஆசிரியர் தாத்தாவும் 90 வயதிலும் சுறுசுறுப்பாய்ப் பல பணிகளைச் செய்வதும் தன்னம்பிக்கையின் அடித்தளத்தில்தான். அவர்களை உள்ளத்தில் கொண்டால், உங்களுக்கும் உற்சாகம் வரும், ஊக்கம் வரும். கருப்பாய் இருப்பது, குள்ளமாய் இருப்பது, உடலில் குறைபாடு இருப்பது தாழ்வு என்ற எண்ணம் வரக் கூடாது. எல்லா உறுப்புகளும் செயலிழந்த பின்பும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் உலக சாதனை புரிந்தார்.

நல்லொழுக்கம்: கேடானவற்றை விலக்கி, நல்லதை ஏற்று வாழ்வதே நல்லொழுக்கம். திட்டமிட்டுச் செயலைச் செய்தல்; நிதானமாகப் பதட்டமின்றி செய்தல்; உரிய காலத்தே செய்தல், முறையாகச் செய்தல், முழு மனதோடு செய்தல் எல்லாம் நல்லொழுக்கத்தில் அடங்கும்.

பிறரிடம் பிஞ்சுகள் நடந்துகொள்ள வேண்டியது எப்படி?

பிறர் உணர்வுகளை மதித்தல்: நமக்குள்ளதைப் போலவே மற்றவர்க்கும் உணர்வு உண்டு, ஆசை உண்டு, விருப்பம் உண்டு என்பதைப் பிஞ்சுகள் புரிந்துகொள்ள வேண்டும். பிறரிடம் அன்பாக மரியாதையோடு, பாசத்தோடு பழக வேண்டும். அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி அதற்கு உதவ வேண்டும்.

வெறுப்பு கூடாது: கருப்பாய் இருக்கிறார்கள் என்றோ, உடல் குறைபாட்டுடன் இருக்கிறார்கள் என்றோ, அழகாய் இல்லை என்றோ பிறரை ஒதுக்குவதோ, வெறுப்பாய்ப் பார்ப்பதோ கூடாது.

“உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’’ என்றார் வள்ளுவர். அறிஞர் அண்ணா குள்ளம், கருப்பு, ஆனால், அவரிடம்தான் அறிவு, ஆற்றல், ஆளுமைத்திறன், பேச்சாற்றல் எல்லாம் இருந்தன.

கருப்பாக இருப்பவர்கள்தான் அறிவும், உடல்  நலமும் அதிகம் உடையவராய் இருப்பர் என்று உடல் சார்ந்த அறிவியல் கூறுகிறது. எனவே, நிற வேற்றுமை கூடாது. கருப்பு, வெள்ளை என்னும் நிறபேதத்தை முற்றாக நம் மனதில் இருந்து துடைத்து எறிந்து விடவேண்டும்.

ஜாதி உணர்வு கூடாது: ஜாதி என்பது உயர்ஜாதியினரால் உண்டாக்கப்பட்ட சதி. பிறப்பால் எல்லோரும் சமம். உயர்வு தாழ்வு, இழிவு ஏதும் இல்லை. இதை பிஞ்சுகள் நெஞ்சில் பதித்துக்கொள்ள வேண்டும். நம்முடன் பழகுகின்றவர்களிடம் எந்த ஜாதி உணர்வும் வேற்றுமையும் இன்றி கூடிப் பழக வேண்டும். ஜாதி உணர்வு, பற்று என்பது எப்பருவத்திலும் நம்மிடையே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மத உணர்வு கூடாது: நான் இந்த மதம், அவன் அந்த மதம் அவள் இன்னொரு மதம் என்று பிரித்து அறியக் கூடாது. நாம் மனிதர், நாம் மாணவர், நாம் எல்லோரும் சமம் என்ற உணர்வை வளர்த்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மூடநம்பிக்கை கூடாது: கையில் கயிறு கட்டுதல், தாயத்து போடுதல், மதக்குறிகள் இடுதல் கூடாது. எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்பும், ஏன்? எதற்கு? என்ற கேள்விகளைக் கேட்க வேண்டும். அறிவுக்குச் சரி என்று பட்டால் மட்டுமே அதைச் செய்ய வேண்டும். அறிவுக்கு ஒவ்வாத எந்த ஒன்றையும் விலக்க வேண்டும்.

28
பழகுமுகாம் - 2022பழகுமுகாம் - 20222nd August 2022
அழகுதமிழ் நீதிநெறி2nd August 2022அழகுதமிழ் நீதிநெறி

மற்ற படைப்புகள்

2020_feb_a16
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

பிழைகளைத் திருத்துங்கள்

Read More
2021_jan_v27
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்
21st January 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2020_mar_v47
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2022_april_30
ஏப்ரல் 2022பிஞ்சுகள் பக்கம்
4th April 2022 by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல! : நிறம் மாறும் பச்சோந்தி மலை

Read More
2020_aug_v41
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
1st September 2020 by ஆசிரியர்

தைக்காத சட்டை!

Read More
2021_apr_v23
ஏப்ரல் 2021பிஞ்சுகள் பக்கம்
29th March 2021 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்: செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p