• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கணக்கும் இனிக்கும்

2022_dec_6
அறிவியல்கணக்கும் இனிக்கும் (தொடர்)டிசம்பர் 2022

உமாநாத் செல்வம்

திசையறிவு

எல்லா குழந்தைகளுக்குமே நான்கு திசைகள் எவை என்பது தெரிந்து இருக்கும். அது மிக எளிதாகவும் விளங்கிவிடும். இரண்டாம் வகுப்பிலேயே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று அறிந்திருப்பார்கள். ஆனால் அதனால் என்ன பயன்? அதனை நாம் பயன்படுத்துகின்றோமா? இந்தக் கேள்விகள் எல்லா குழந்தைகளுக்குமே இருக்கும். திசைகள் கணிதத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவை.

கணிதக் குறியீடுகள் இல்லாமல் திசைகளை தன்னிச்சையாகச் சொல்லவும் முடியாது. அடிப்படையாக நான்கு திசைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் 90 டிகிரி வித்தியாசம் உள்ளது. மேற்கும் கிழக்கும் எதிரெதிர் திசை. அப்படியானால் அவர்களுக்குள் இருக்கும் வித்தியாசம் 180 டிகிரி. அதேபோல வடக்கும் தெற்கும் 180 டிகிரி வித்தியாசம்.

எதிரும் புதிருமா இருக்காங்க என அடிக்கடி சொல்வார்கள். அது கிழக்கும் மேற்கும்போல, அல்லது வடக்கும் தெற்கும் போல.

வரைபடங்களில் எப்போது வடக்கு திசை மேலே இருக்கும் இந்திய வரைபடத்தினைப் பார்த்தால் மேலே காஷ்மீர் _ வடக்கு முனை. கீழே குமரி முனைதான் தெற்குப் புள்ளி. இனி செய்திகளிலும் கவனியுங்கள். “வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு”-_ அப்படியென்றால் தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள். தமிழ்நாடு வரைபடத்தை எடுத்து வடக்கு தெற்கு மாவட்டங்கள் யாவை என ஆராயவும்.

சரி, ஒரு சின்ன விளையாட்டினை விளையாடுவோமா? _ திசைகளை நன்றாக பழகிக்கொள்ளவே.

செயல் 1:
நீங்கள் குளத்தில் நண்பர்களோடு விளையாடிக்-கொண்டு இருக்கின்றீர்கள். உடனே வீட்டிற்குச் செல்ல வேண்டும். எப்படி செல்வீர்கள்? குளத்தில் இருந்து வெளிவர கிழக்குப் பக்கம் மட்டுமே வழி இருக்கின்றது. இரண்டு கட்டம் கிழக்குத் திசையில், பின்னர் வடக்கு நோக்கி அய்ந்து கட்டத்தில் வீட்டினை அடையலாம். சரி இதே குளத்தினைவிட்டு வர வடக்குப் பக்கம் வழி இருக்கின்றது எனில், எப்படி வீட்டினை அடைவீர்கள்?

செயல் 2:
பள்ளியில் இருந்து நூலகம் செல்ல வேண்டும். பள்ளியில் நான்கு பக்கமும் வழி உள்ளது. வீட்டிற்குச் சென்று செல்வதும் நேராக நூலகம் செல்வதும் ஒரே தூரமா? இரண்டிற்கும் எப்படி வழி சொல்வீர்கள்?

செயல் 3:
பள்ளியில் இருந்து வீட்டிற்குச் செல்ல வேண்டும். இருப்பதிலேயே அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு நிபந்தனை _ குளத்திற்கு அருகே இருக்கும் கட்டங்களிலோ, நூலகத்திற்கு அருகே இருக்கும் கட்டங்களிலோ சென்றால் மாட்டிக்கொள்வீர்கள். அதேசமயம் நடந்த கட்டத்திலேயே மீண்டும் நடக்கக்கூடாது.

(வீட்டிற்கு அருகே இருக்கும் கட்டங்களுக்குச் சென்றாலும் அடுத்து வீட்டிற்குள்தான் நுழைய வேண்டும்)
திசைகள் அறிந்தால், நம்ம வீட்டிற்கு வழி சொல்ல இது உதவும். இன்னும்கூட பெரியவர்கள் நிறைய பேருக்கு ஓர் இடத்தில் இருந்து வீட்டிற்கு வழி சரியாகச் சொல்லத் தெரியாது. ஏனெனில், அவர்களுக்கு அந்த வழி நன்றாகப் பழகிவிட்டிருக்கும். “அப்படியே நேரா வந்தா நம்ம வீடு” என்பார்கள். ஆனால் நான்கைந்து இடது, வலது திரும்பி வரவேண்டி வரும். திசைகள் சரியாகத் தெரிந்தால் வழி சொல்வதும், இடங்களைத் தேடிப்போவதும் எளிதாக இருக்கும்.
இப்போது நம்மிடம் நவீனக் கருவிகள் வந்துவிட்டன.

சென்னையின் ஒரு பகுதியில் இருந்து திருநெல்வேலியின் ஒரு வீட்டிற்குச் செல்ல வழிகாட்டும் அளவிற்குச் தொழில்நுட்பம் வளர்ந்து-விட்டது. Street View என்ற வசதியும் வந்துவிட்டது. அந்தத் தெருவில் நடந்து சென்றால் என்னென்ன பார்க்கலாமோ அதனைப் பார்க்க இயலும். எல்லா இடங்களுக்கும் மெல்ல மெல்ல இது பதியப்படுகின்றது. அது ஒரு துணை மட்டுமே.

துல்லியமாக நம் தேவைகளுக்கு அது உதவாது. திசையறிவை வளர்த்துக்கொண்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். உங்கள் நேரத்தை மட்டுமல்ல, மற்றவர்களின் நேரத்தையும்தான்.

கருவிகளும், இணையமும் இல்லா நேரத்தில் அல்லது சிக்னல் இல்லாத இடங்களில் திசையறிவு தானே நம்மைக் காக்க வல்லது.
(இனிக்க இனிக்க…)

 

26
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:5th December 2022
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-386th December 2022

மற்ற படைப்புகள்

2019_dec_a36
அறிவியல்டிசம்பர் 2019
28th November 2019 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : அழகிய நாய்க்குட்டி

Read More
2022_dec_18
டிசம்பர் 2022பாசத்திற்குரிய பேத்திபேத்திபேரன்களே
5th December 2022 by ஆசிரியர்

படித்தீர்களா பெரியார் தாத்தா

Read More
5
அறிவியல்டிசம்பர் 2024பிஞ்சு 2024பொது அறிவு
7th December 2024 by சரவணா இராஜேந்திரன்

அறிவியல்: இறப்பே இல்லாத உயிரனமா ஹைட்ரா

Read More
2021_nov_v32
அறிவியல்நவம்பர் 2021
2nd November 2021 by ஆசிரியர்

அறிவோம்: மூன்றாம் வினையூக்கி கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு!

Read More
2022_new
அறிவியல்ஜூலை 2022
4th July 2022 by ஆசிரியர்

அசத்தும் அறிவியல்! நியூட்டனின் வண்ணச் சக்கரம்

Read More
2023_feb_7
அறிவியல்பிப்ரவரி2023
2nd February 2023 by ஆசிரியர்

விண்ணியல் : நிலாவிலே விவசாயம் செய்யலாமா!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p